districts

img

சேற்றில் சிக்கிய பசுமாடு மீட்பு

சேற்றில் சிக்கிய பசுமாடு மீட்பு அவிநாசி, டிச.24- அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் ஓடை சேற்றில் சிக் கிய பசுமாடு 4 நாள்க ளுக்கு பிறகு உயிரு டன் மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட் டம், அவிநாசி அருகே நடுவச்சேரி ராயம் பாளையம் ஒடை பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று கடந்த திங்களன்று சேற்றில் சிக்கியது. இத னையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தோர் கடந்த நான்கு  நாட்களாக மாட்டை மீட்க கடும் முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும், மாட்டை மீட்க முடியவில்லை. இந்நிலையில் இதுகுறித்த தகவல் அறிந்த அவிநாசி காவல் துறை, தீய ணைப்புத் துறையினர் வெள்ளியன்று சம்பவயிடத்திற்கு வந்தனர். இதன்பின் கிரேன் மூலம் சேற்றில் சிக்கிய மாட்டை உயிருடன் மீட்டு முதலுதவி அளித்தனர். நான்கு நாட்களுக்கு பிறகு சேற்றில் சிக்கிய மாடு உயிருடன் மீட்கப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.