districts

img

750 மாணவர்களுக்கு 8 ஆசிரியர்கள் மட்டுமா? நாச்சிபாளையம் பள்ளியை மேம்படுத்த கோரிக்கை

திருப்பூர், ஏப்.11- பொங்கலூர் ஒன்றியம், நாச்சி பாளையம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் 750க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் படித்து  வரும் நிலையில் பாடம் கற்பிக்க 8 ஆசிரியர்கள் மட்டுமே இருக்கின்ற னர். எனவே இப்பள்ளியை மேம் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதி கள், பெற்றோர், ஆசிரியர் உள்ளிட்ட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர். திருப்பூர் - காங்கயம் சாலை யில், நாச்சிபாளையம் கிராமம் அமைந்துள்ளது. பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இப்பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்று  வட்டார கிராமப் பகுதிகளுக்கு மைய மாக இப்பள்ளி செயல்பட்டு வரு கிறது. இங்கு அண்மை காலத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.

மொத்தம் 750க்கும் மேற்பட்டோர் படித்து வரும் நிலையில், குறைவான ஆசி ரியர்களே உள்ளனர். ஏறத்தாழ 18  ஆசிரியர்கள் வேலை செய்ய வேண் டிய இப்பள்ளியில், தற்போது 8  ஆசிரியர்கள் மட்டுமே இருக்கின்ற னர். ஆசிரியர்களைக் கூடுதல் படுத்த வேண்டும் என பெற்றோரும், ஆசிரியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  ஆனால், இதற்கு இப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்முயற்சி எடுக்கவில்லை என அப்பகுதி  பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ள னர். குறிப்பாக பள்ளிக்கல்வித் துறை மூலம் இப்பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாக பள்ளி வளர்ச்சிக்கு செலவிடுவ தில்லை என்றும், இதுகுறித்து முறை யான கணக்கு பதிவு செய்து வைக் கப்படவில்லை என்றும் மக்கள் புகார் கூறுகின்றனர்.

அத்துடன் பள்ளி திறப்பு விழாவின்போது இப் பள்ளி கட்டிடத்துக்கு வர்ணம் பூசாம லும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி செய்து தரா மல் உள்ளதாகவும் கூறுகின்றனர். செலவு செய்யப்பட்ட தொகை குறித்து பள்ளி மேலாண்மை குழுவுக்கும் தெரிவிக்கவில்லை. பெற்றோர், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும்  வகையில் பள்ளியின் தகவல் பல கையிலும் இந்த விபரம் வெளிப் படையாக பார்வைக்கு படும்படி எழுதி வைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர், ஆசிரியர், பள்ளி நல னில் அக்கறை உள்ளவர்கள் அர சிடம் புகார் தெரிவித்தாலோ, கேள்வி எழுப்பினாலோ அதை அலட்சியப் படுத்துவதாகவும் நிர்வாகத்தின் மீது மக்கள் குற்றம் சாட்டுகின்ற னர். அத்துடன்  இப்பள்ளி ஆசிரியர் கள் மீது தலைமை ஆசிரியர் தவ றான பொய் புகார் எழுப்பி விடு கின்றார். எனவே, மன உளைச்சலுடன் வேலை செய்ய முடியாத நிலை ஏற் படுவதாக கூறி இப்பள்ளி ஆசிரியர் கள் வேறு பள்ளிக்கு இட மாறுதல் கேட்டுள்ளனர். அதேபோல் அண் மையில் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்க தமிழக அரசு உரிய வழி காட்டுதல் பிறப்பித்து இருந்தாலும், அந்த மேலாண்மைக் குழுவின் ஆலோசனைகளைப் பெறாமலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிகளின் கருத்துகளைக் கேட்காம லும் தன்னிச்சையாக செயல்படுவ தால் பள்ளி தலைமை ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.