districts

img

ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமிற்கு தடை விதித்திடுக கோவை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்

கோவை, டிச.24-  கோவையில் ஆர்.எஸ்.எஸ் நடத் தும் பயிற்சி முகாமை தடுத்து நிறுத் தக்கோரி மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  கோவை காளப்பட்டி பகுதியில்  வருகிற 31 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பான ராஸ்டிரிய சேவிகா சமிதி சார்பில் வளரிளம் பெண்களுக்கான பண்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகா மிற்கு அனுமதியளிக்கக்கூடாது என வலியுறுத்தி வெள்ளியன்று  மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியா ரிய அமைப்புகள் உள்ளிட்ட முற் போக்கு, ஜனநாயக அமைப்புகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். முன்ன தாக ஆர்எஸ்எஸ் முகாமை தடை  செய்யக்கோரி, கண்டன முழக்கங் களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  இதனையடுத்து தந்தை பெரி யார் திராவிர் கழக பொதுச்செய லாளர் கு. ராமகிருட்டிணன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்.யின் துணை அமைப்பான ராஷ்ட்ரிய சேவிகா சம்தி என்கிற இந்துத்துவா அமைப்பின் பயிற்சி முகாம் கோவை தனியார் கல் லூரியில் நடைபெறுவதாக அறிவிக் கப்பட்டுள்ளது. மக்களிடையே தொடர்ந்து மதவெறி உணர்வுகளை யும், வெறுப்பு அரசியலையும் ராஷ்ட்ர சேவிகா சம்தி அமைப்பு  தூண்டி வருகிறது. மேலும், தமிழக அரசுக்கும், சிறுபான்மையின மக்க ளுக்கு எதிராக ஆயுதப் பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. இச்சூழலில் கோவையின் அமை தியை குலைத்து, பதற்றத்தை ஏற்ப டுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்நி கழ்ச்சியை உடனே ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் வருகிற 31 ஆம் தேதி பயிற்சி முகாம் முன்பு  முற்றுகை போராட்டம் நடத்தப் படும், என்றார்.