சட்டவிரோதமாக வெடி வைத்த கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருப்பூர், மே 2 - ஊத்துக்குளி வட்டம், வெண்கலபாளையத்தில், பழனிச் சாமி என்பவரது கல்குவாரியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து, சட்டவிரோதமாக வெடி வைத்தன் மீது வெடி மருந்து சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய சட்ட விரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கம் கோரியுள்ளது. இதுகுறித்து கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பழனிசாமி கல்குவாரியில் சட்ட விரோதமாக சனிக்கிழமை மாலை சுமார் 6.20 மணிக்கு வெடி வைத்தனர். இந்த வெடி சத்தத்தால் சுமார் 45 நிமிடங்க ளுக்கு மேல் புகை பாதிப்பும், நில அதிர்வுகளும் ஏற்பட்டது. விவசாயி நடராஜன் காட்டிலிருந்த ஆடுகளை பட்டியை நோக்கி வரும் போது ஓடி விட்டது. ஏற்கனவே வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களிலும் மாலை சுமார் 5.30 மணிக்கு, அனுமதித்த நேரத்தை தாண்டி வெடி வைத்து உள்ளனர். எனவே, கல்குவாரி உரிமையாளர் மீது சட்டப்படி கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
விஏஓ-க்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
சேலம், மே 2- சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், மானாத்தாள் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் வினோத் குமார். இவர், கடந்த ஏப்.18 ஆம் தேதி, தொளசம்பட்டி அருகே தாண்டானூர் பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மண் கடத்தி வந்த டிராக்டர் மற்றும் பொக்லைன் வாகனங்களை பறிமுதல் செய்து, கனிம வளத்துறை அதிகாரி களிடம் ஒப்படைத்தார். இதனால் ஆத்திரமடைந்த நபர்கள் விஏஓ வை, வழிமறித்து, அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தார். இதைடுத்து அங்கிருந்து தப்பி சென்ற வினோத்குமார், தொளசம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்ச மடைந்தார். அப்போது சித்துராஜ் மீது போலீசாரிடம் வினோத் குமார் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை செய்ய முயன்ற சித்துராஜை கைது செய்தனர்.
சிறுமி வன்கொடுமை வளர்ப்பு தந்தை கைது
கோவை, மே 2- கோவையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தாயார் பெயிண்டர் ஒரு வரை 2 ஆவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சிறுமி யின் தாயார் வீட்டில் இல் லாத நேரங்களில் 2 ஆவது கணவர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயா ரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி யடைந்த அவர், துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். அப்புகாரின் பேரில், வளர்ப்பு தந்தை மீது போலீ சார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத் தனர்.