திருப்பூர், ஜூன் 21- திருப்பூர் மாவட்டத்தில் மாணவர் மனசு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிகளில் புகார் தெரிவிக்கும் மாணவ, மாணவிகளின் பிரச்சனை களை விசாரிக்க தலைமை ஆசிரியர் தலைமையில் 2 ஆசிரியர், பெற் றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணி யாளர், நிர்வாக பணியாளர், வெளி உறுப்பினர் உள்ளிட்ட 15 பேர் அடங் கிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்படுகிறது. இந்த குழு மாணவர் மனசு பெட்டியில் இடப்ப டும் புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ பிரித்து பார்த்து புகாரை பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காணும். நடப்பு கல்வியாண்டு கடந்த 12 ஆம் தேதி முதல் பள்ளி கள் செயல்படும் நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மாணவர் மனசு திட்டத் தின் கீழ் புகார் பெட்டி வைக்க வேண் டும் என்று கோரிக்கை எழுந்துள் ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதா வது, அனைத்து பள்ளிகளிலும் மாண வர் மனசு திட்டத்தின் கீழ் பெட்டி வைக்க வேண்டும். கல்வியாண்டு துவங்கும் முன்பாகவே இது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு உத்த ரவிடப்பட்டுள்ளது. இப்பெட்டியில் சேர்க்கப்பட்ட புகார், அதற்கு காணப் பட்ட தீர்வு குறித்து ஆலோசனை கூட் டங்கள் வாயிலாக தலைமை ஆசிரி யர்களிடம் விபரம் கேட்டறியப்படும். இவ்வாறு அவர் கூறினார்.