districts

img

கோடை கால சிறப்பு பேருந்துகள் இயக்க கோரிக்கை

மே.பாளையம், ஏப்.28- கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் இருந்து நீலகிரி செல்ல  கோடை கால சிறப்பு பேருந்துகள் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.  கோடை விடுமுறை காலத்தை முன்னிட்டு வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான நீலகிரிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர் வம் காட்டி வருகின்றனர். இதனால் நீலகிரி மலையின் அடிவார பகுதி யான மேட்டுப்பாளையத்தில் தினசரி  கூடும் பயணிகளின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகி றது. ஆனால்  மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை, குன்னூர், கோத்த கிரி போன்ற சுற்றுலா தலங்களுக்கு நேரடியாக செல்ல போதிய அள வில் பேருந்துகள் இல்லை. மிக குறைந்த எண்ணிக்கையியிலேயே இயக்கப்படுகின்றன.  கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதி களில் இருந்து வரும் தொலை தூரப் பேருந்துகள் தான் மேட்டுப்பா ளையம் பேருந்து நிலையம் வந்த டைந்து, பின்னர் மேட்டுப்பாளை யத்தில் இருந்து உதகைக்கு செல்கின் றன. இப்பேருந்துகளில் ஏற்கனவே பயணிகள்  இருப்பதால்  மேட்டுப்பா ளையத்தில் இருந்து உதகை, குன் னூர் செல்லும் பயணிகளுக்கு அமர  இடமே கிடைப்பதில்லை. மேட்டுப்பா ளையத்தில் இருந்து நீலகிரிக்கு  நின்று கொண்டு தான் செல்ல வேண் டும். சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரம் கால் வலிக்க நின்று செல்வதால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். இதனை சமாளிக்க  மேட்டுப்பா ளையத்தில் இருந்து நீலகிரி செல்வ தற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட வேண்டும் என்பதே பொதுமக்க ளின் கோரிக்கையாக உள்ளது. கோடை விடுமுறையான ஒரு மாத காலத்திற்கு மட்டுமாவது ஒரு மணி  நேரத்துக்கு ஒரு பேருந்து என்ற வீதம் மேட்டுப்பாளையத்தில் இருந்து  இயக்கப்பட்டால் சுற்றுலாப் பயணிக ளுக்கு பெரிதும் உதவியாக இருக் ்கும். எனவே. சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக  போக்குவரத்துக் கழகம்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்ற கோரிக்கை எழுந்துள்ளது.