districts

img

பள்ளி செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை

உதகை, ஆக. 10- கூடலூர் தாலுகா புளியம்பாறை அருகே உள்ள பள்ளி குழந்தைகள் செல் லும் சாலை குண்டும், குழியுமாக உள்ள தால் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கூடலூர் தாலுகா செயலாளர் இராசி.ரவிக்குமார் கூறு கையில், நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா புளியம்பாறை தேவர் சோலை பேரூராட்சியில் 10 ஆவது  வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் புளியம்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்து  கல்வி கற்கின்றனர்.  இந்தப் பள்ளிக்கு செல்லக்கூடிய பாதை, நடந்து செல்வதற்கே தகுதி யற்ற சாலையாக உள்ளது. இதனால் மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளா கின்றனர். குறிப்பாக மழைக்காலத்தில், இந்த சாலையின் வழியாக செல்லும் மாணவர்கள் தவறி விழுந்து விபத்துக ளும் ஏற்படுகிறது. மேலும், இந்தப் பாதையை பயன்படுத்தி தான் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பொதுமக் கள் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. இதுகுறித்து தேவர் சோலை பேரூ ராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. உடனடியாக மாவட்ட நிர்வா கம் தலையிட்டு இச்சாலையை செப்ப ணிட்டு தர வேண்டும்.  இல்லையெனில், இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் சார்பில், மாணவர்கள், பெற்றோர்கள், வாகன ஓட்டிகள் அனைவரையும் திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.