districts

img

பல்லடம் ஒன்றியத்தில் எம்.பி., நிதியில் கட்டிய சமுதாய நலக்கூடங்களை சீரமைக்க கோரிக்கை

திருப்பூர், டிச. 15 - கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன் கடந்த 2009 - 2014 காலகட்டத் தில் நிதி ஒதுக்கி பல்லடம் ஒன்றியத்தில் கட் டப்பட்ட சமுதாய நலக் கூடங்களை புதுப்பித் துத் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்ல டம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம்,  இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் எஸ்.வினீத்துக்கு வியாழக்கிழமை எழு தியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பல்ல டம் ஊராட்சி ஒன்றியத்தில் ஏழை, எளிய மக் கள் பயன்படுத்தும் வகையில், கடந்த 2009  - 2014 ஆம் ஆண்டு கால கட்டத்தில், பி.ஆர்.நடராஜன் எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து பணம் ஒதுக்கி சமுதாய நலக் கூடங்களைக் கட்டிக் கொடுத்தார். தனியார்  மண்டபங்களில் அதிக கட்டணம் செலுத்த இயலாத நிலையில் ஏழை, எளிய மக்கள்  இந்த சமுதாய நலக்கூடங்களை பயன்படுத்தி  வருகின்றனர். எனினும் இக்கட்டிடங்கள் செப் பனிடப்படாமல் வர்ணம் பூசாமல் பழுத டைந்து உள்ளன. எனவே பூமலூர் ஊராட்சி நடுவேலம் பாளையம், 63 வேலம்பாளையம் ஊராட்சி 63  வேலம்பாளையம், சுக்கம்பாளையம் ஊராட்சி காளிவேலம்பட்டி, வடுகபாளை யம் புதூர் ஊராட்சி வெங்கிட்டாபுரம், கரைப் புதூர் ஊராட்சி உப்பிலிபாளையம் ஆகிய  கிராமங்களில் உள்ள சமுதாய நலக்கூ டங்களை சீரமைத்து, வர்ணம் பூசி பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்து தர வேண்டும். இது தொடர்பாக ஊராட்சி மன்ற நிர்வாகங்களுக்கு உரிய வழி காட்டுதல்களை மாவட்ட நிர்வாகம் வழங்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்வதாக ஆர்.பரமசிவம் கூறியுள்ளார்.