districts

சாலை அமைக்கும் முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

இளம்பிள்ளை, ஜூன் 8- காடையாம்பட்டி பகுதியில் சாலை அமைக்கும் முன்பு,  அதன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, 17 ஆவது  வார்டுக்குட்பட்ட காடையாம்பட்டி, தெலுங்கு செட்டியார் தெருவில் சாலை அமைக்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் செவ்வாயன்று இடங்கணசாலை நகராட்சி ஆணை யர் நித்யா-விடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், காடையாம்பட்டி, தெலுங்கு செட்டியார் தெரு வில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். இப்பகுதியில் உள்ள சாலைகளை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதனை அகற்றப்படாமல் குறுகலாக சாலை அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. சாலை ஆக்கிர மிப்பு செய்யப்பட்டுள்ளதால், பிரசவம் மற்றும் அவசரகால மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் கூட வீதிகளில் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், பள்ளி குழந்தை கள் செல்லும் வாகனங்கள் வருவதும் தடைபட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இறந்தவர்கள் உடலை மயானத்திற்கு எடுத் துச்செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, முறையான அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு களை அகற்றி, மக்கள் பயன்படுத்தும் வகையில் புதிய சாலை  அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இம்மனுவை பெற்றுக்கொண்ட நக ராட்சி ஆணையர் நித்யா, நேரில் ஆய்வு செய்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.