districts

விசைத்தறிக்கு மின் கட்டண சலுகை வழங்குவது போல் பவர்டேபிள் தொழிலுக்கும் வழங்க கோரிக்கை

திருப்பூர், ஜூலை 21 – தமிழ்நாட்டில் விசைத்தறித் தொழி லுக்கு 1000 யூனிட்டுகள் வரை மின் கட் டண சலுகை வழங்குவது போல பவர்டே பிள் தொழிலுக்கும் மின் கட்டண சலுகை  வழங்க வேண்டும் என்று திருப்பூர் பனி யன் தையல் நிலைய (பவர்டேபிள்) உரி மையாளர்கள் சங்கம் கோரியுள்ளது. திருப்பூர் குலாலர் திருமண மண்ட பத்தில் கடந்த செவ்வாயன்று பவர்டே பிள் உரிமையாளர்கள் சங்க மகாசபைக்  கூட்டம் சங்கத் தலைவர் ஆர்.நந்தகோ பால் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் செயலாளர் கே.எஸ்.முரு கேசன், பொருளாளர் எஸ்.சுந்தரம் உள்பட பவர்டேபிள் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திருப்பூரில் கட்டப் பட்டு வரும் இஎஸ்ஐ மருத்துவம னையை விரைவாக பணி முடித்து தொழிலாளர் குடும்பங்கள் பயன்பாட் டுக்குக் கொண்டு வர வேண்டும், நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கார ணங்களால் தொழில் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால்  ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு  ஜூன் 6ஆம் தேதி முதல் நடைமுறைக்கு  வந்திருக்க வேண்டிய 7 சதவிகித தையல் கூலி உயர்வை ஆகஸ்ட் 1ஆம்  தேதி முதல் அமல்படுத்துவதாக சைமா  சங்கத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல்  பவர்டேபிள் உரிமையாளர்கள் 7 சதவி கித கூலி உயர்வை பனியன் உற்பத்தி நிறுவனங்களிடம் கேட்டுப் பெற வேண் டும்.

அதன் பிறகும் தொடர்ந்து கூலி உயர்வை வழங்காமல் இருக்கும் நிறுவ னங்களில் உற்பத்தியை நிறுத்தி கூலி உயர்வைப் பெற வலியுறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரி, இ வே பில் ஆகிய வற்றை நேரடியான பனியன் நிறுவ னங்கள் வழங்க வேண்டும். சார்புத் தொழிலாக நடைபெறும் பவர்டேபிள் நிலையங்களில் முழுமை அடையாத பனியன் ஆடைகளை செக்கிங் செய்ய  அனுப்பும்போது வழிமறித்து அபராதம்  விதிப்பதை கைவிட வேண்டும். இது குறித்து ஜிஎஸ்டி அலுவலகத்தில் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. மின் கட்டணம் உயர்வு பவர்டேபிள்  தொழிலுக்கு சுமையாக உள்ளது. எனவே விசைத்தறித் தொழிலுக்கு 1000  யூனிட் வரை விலக்கு அளிக்கப்பட்டது  போல, 20 கே.வி. மின்திறன் வரை  பயன்படுத்தும் பவர்டேபிள் நிலையங்க ளுக்கும் தமிழ்நாடு அரசு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மகாசபையில் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கத் தலைவராக ஆர்.நந்தகோபால், செயலாளராக கே. எஸ்.முருகேசன், பொருளாளராக எஸ். சுந்தரம், துணைத் தலைவராக எஸ்.நாக ராஜ், துணைச் செயலாளராக கே.எம். பழனிச்சாமி மற்றும் 15 பேர் செயற்குழு  உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட் டனர். நிறைவாக துணைத் தலைவர் எஸ்.நாகராஜ் நன்றி கூறினார்.