districts

img

மயான வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை

தருமபுரி, செப்.19- பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஆலமரத்துபட்டி மலை வாழ் மக்கள் கிராம‌த்தில் மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம், மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலஅலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட் டிப்பட்டி வட்டத்திற்குட்பட்டது ஆலமரத்து பட்டி கிராமம். இப்பகுதியில் சுமார் நூற்றுக் கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். கடந்த 2003 ஆம் ஆண்டு ஆலமரத்தூர் கிராம மக்களுக்கு பாப் பிரெட்டிப்பட்டி வட்டாட்சியரால் மயானம் உட் பிரிவு செய்யப்பட்டது. ஊராட்சி மூலம் மயா னம் செல்லும் பாதைக்கு தெருவிளக்கு அமைக்கப்பட்டது. இதனால், ஆலமரத்து பட்டி கிராமத்தில் இறந்தவர்களின் உடலை இந்த மயானத்தில் அடக்கம் செய்தும், சிதை மூட்டியும் வந்தனர். இந்நிலையில், மோட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், மயானம் நீர்நிலை குட்டை பகுதியில் கட்டப் பட்டுள்ளது என வழக்கு தொடுத்துள்ளார். இந்த குட்டை பகுதியில் நீர்வரத்து இல்லை. எப்போதும் வறண்டே காணப்படும். அந்த தனிநபர் இந்த பகுதியை ஆக்கிரமித்து விவ சாயம் செய்ய வேண்டும் என்ற நோக்கத் தில் வழக்கு தொடுத்துள்ளார். எனவே ஆலமரத்து பட்டி கிராம மலை வாழ் மக்களின் நலன் கருதி, சர்வே எண்  125/2-ல் பயனற்ற குட்டையை வகைமாற்றம் செய்து மயானம் அமைத்து சுற்றுவர் உள் ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் ஏ.குமார், வட்ட செயலாளர் தி.வ.தனு சன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் அம்புரோஸ் ஆகியோர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா விடம் மனு அளித்தனர். இக்கோரிக்கை மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என கவிதா தெரி வித்தார்.