அவிநாசி, மார்ச் 8- விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக விசைத்தறி உரிமையா ளர்கள் தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும் என அனைத்து தொழிற் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அவிநாசியில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திங்களன்று மாலை நடைபெற்றது. இக்கூட் ்டத்தில் சிஐடியு சார்பில் பழனிச்சாமி, முரு கன், ஏஐடியூசி செல்வராஜ், கனகராஜ், ஐஎன்டியூசி சாய் கண்ணன், எம் எல் எஃப் பாண்டியராஜன், எல் பி எஃப் கணேசன், ஏடிபி நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானம் பின்வருமாறு, 2014 ஆம் ஆண்டு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றாத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து, விசைத்தறி உரிமையாளர் சங்கம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இப்போராட்டங்களில் விசைத்தறி உரிமை யாளர்களுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர் களும் பங்்கெடுத்துக் கொண்டனர். இத னைத் தொடர்ந்து மார்ச் 1ஆம் தேதி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் உடன் 2014 ஆம் ஆண்டு கூலி உயர்வில் இருந்து 15 சதவிகித கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இத்தகைய சூழலில் விசைத்தறி உரிமையா ளர்கள், தொழிற்சங்கங்களை அழைத்து தொழிலாளர்களுக்கு உண்டான கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.