districts

பர்லியாறு சோதனைச் சாவடியை திறக்க கோரிக்கை

உதகை, ஜன.6- குன்னூரில் முக்கிய நுழைவு வாயி லான பர்லியாறு சோதனை சாவடி இரவோடு  இரவாக பூட்டப்பட்டது. சோதனைச்சாவ டியை மீண்டும் திறக்க கோரிக்கை எழுந்துள் ளது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் மாவோ யிஸ்டுகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வும், குற்ற செயல்களை தடுக்கவும் மாவட்ட  எல்லைகளில் காவல்துறையின் சார்பில் சோதனை சாவடிகள் அமைத்து 24 மணி நேரம்  கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.  குன்னூர் பகுதியில் கேரளா எல்லை பகுதி யான மானார் சோதனை சாவடி, கோத்தகிரி பகுதியில் குஞ்சப்பனை சோதனை சாவடி மற்றும் பர்லியாறு சோதனை சாவடி ஆகிய  சோதனை சாவடிகள் செயல்பட்டு வந்தன.  இந்த நிலையில் பர்லியாறு சோதனை சாவ டியை திடீரென பூட்டி காலி செய்துள்ள னர். தற்போது பர்லியாறு சோதனை சாவடி யில் காவல்துறையின் இல்லாததால் குற்றசம் பவங்கள் அதிகரிக்கும் நிலை உருவாகி யுள்ளது. எனவே மாவட்ட காவல்துறை மீண் டும் பர்லியாறு சோதனை சாவடியை திறக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.