ஒகேனக்கல்லை சர்வதேச சுற்றுலாத் தலமாக மாற்றுக
தருமபுரி, டிச.22-, ஒகேனக்கலை சர்வதேச சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கோரிக்கை விடுத்துள்ளார். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தமிழ் நாட்டின் நயாகரா என குறிப்பிடப்படுகிறது. இங்கு உள்ளூர் மக்களைத் தவிர, வெளிமாநிலத்தைச் சேர்ந்த பலரும் சுற்றுலாபயணிகளாக வந்து செல்கின்றனர். இந்த நீர்விழ்ச்சி உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கிய பொழுதுபோக்கு இடமாக மாறும் திற னைக் கொண்டுள்ளது. எனவே, ஒகேனக்கல்லை உலக ளாவிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தவும், அதன் உள் கட்டமைப்பை மேம்படுத்தவும் தேவையான நிதியை ஒதுக்குமாறு ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சகத்திடம், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வலி யுறுத்தியுள்ளார்.
கிறிஸ்துமஸ்: 70 சிறப்பு பேருந்துகள்
கோவை, டிச.22- கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை மண்ட லத்திலிருந்து வெளியூர்களுக்கு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழ கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தில் வருகின்ற டிசம்பர் 25 ஆம்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 22 ஆம்தேதி முதல் 26 ஆம்தேதி வரை கோயம்புத்தூர் மற்றும் சுற்றுப் புற ஊர்களிலிருந்து மதுரை, திருச்செந்தூர், திருநெல் வேலி, நாகர்கோயில், தேனி, திருச்சி, தஞ்சாவூர், சேலம், உதகை போன்ற ஊர்களுக்கு செல்லவும் மற்றும் மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக் கப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
413 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
நாமக்கல், டிச.22- பள்ளிபாளையம் அருகே பெங்களூருவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான 413 கிலோ குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்த னர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள தாஜ் நகர் கொங்கு திருப்பதி என்ற பகுதியில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார், உதவி ஆய்வாளர்கள் சதீஷ், பிரபாகரன், சேகர் உள்ளிட்ட போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது, அவ்வ ழியே சென்ற ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 413 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. மேலும், இவை பெங்களூருவிருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக, பள்ளிபாளையம் கொண்டு செல்லப் பட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து குட்கா பொருட் களை பறிமுதல் செய்த போலீசார், குட்கா பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட, லட்சுமிபுரம், ஜீவா செட் பகுதியைச் சேர்ந்த சுதாகர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் பெனிவால், தினேஷ்குமார் உள்ளிட்ட மூவரை பள்ளிபா ளையம் போலீசார் கைது செய்தனர். மேலும், குட்கா பொருட் களைக் கொண்டு செல்ல பயன்படுத்திய சரக்கு ஆட் டோவையும் பறிமுதல் செய்தனர்.
மக்களுடன் முதல்வர் முகாம்
கோவை, டிச. 22- கோவை இருகூர் பேரூராட்சியில் மக்களுடன் முதல் வர் முகாமில் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்து மனு அளித்தனர். கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட இருகூர் பேரூராட்சியில் அரசு சேவை மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் உள்ளாட்சிகளில் மக்களுடன் முதல்வர் என்ற முகாமை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதன்படி இருகூர் பேரூ ராட்சியில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இம்முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பேரூராட்சிகளின் இயக்குனர் துவாரக நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, காவல் துறை, கூட்டுறவு துறை, ஊன முற்றோர் மறுவாழ்வுத்துறை, அமைப்பு சாரா தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகளில் உள்ள அதிகாரிகள் உதவி இயக்குனர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இது குறித்து இருகூர் பேரூராட்சி தலைவரும் திமுக செயற்குழு உறுப்பினருமான சந்திரன் கூறுகையில், காலையில் துவங்கி மாலைவரை நடைபெற்ற இந்த முகா மில், 14 வார்டுகளில் இருந்தும், ஒவ்வொரு வார்டுக்கும் 500க்கும் மேற்பட்ட மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களை அளித்தனர். அவரது குறைகள் அனைத்தும் ஒரு மாதத்திற்குள் நிறை வேற்றித் தரப்படும் என்றார்.
இந்தியா கூட்டணியால் பாஜக வீழ்த்தப்படும்
திருப்பூர், டிச.22- தொழிலாளர் விரோதப்போக்கை கடைப்பிடித்து வரும் பாஜக அரசை 2024ல் இந்தியா கூட்டணி வீட்டிற்கு அனுப்பும் என ஐஎன்டியுசி தேசிய பொதுச்செயலாளர் அமீர்கான் வெள்ளியன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் வரும் ஜன. 7 ஆம் தேதி ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியா ளர்கள் சந்திப்பு திருப்பூர் ராயபுரம் பகுதி யில் உள்ள தனியார் விடுதியில் வெள்ளி யன்று நடைபெற்றது. ஐஎன்டியுசி தொழிற் சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் அமீர்கான் கலந்து கொண்டு செயற்குழு மற்றும் நிர்வாக குழுக் கூட்டம் குறித்து செய்தி யாளர்களிடம் கூறியதாவது, சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய திருப் பூர் குமரன் புகழ் பெற்ற திருப்பூரில் தொழிற் சங்க மாநில செயற்குழு மற்றும் நிர்வாக குழு மாநில தொழிற்சங்க தலைவர் அருள்ஜோதி தலைமையில் வருகின்ற 7 ஆம் தேதி நடை பெற உள்ளது. தொழிலாளர் விரோத, மக்கள் விரோத பாஜக அரசு பொய் வாக்கு றுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறது. ஆட்சிக்கு வந்து தொழிலாளர் விரோத போக்கை கடைப்பிடித்து வரும் ஒன்றிய பாஜக அரசை அப்புறப்படுத் துவதற்கு ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் செயற்குழு மற்றும் நிர்வாக குழுக் கூட்டம் திருப்புமுனையாக அமையும். நாடு முழுவ தும் பாஜகவிற்கு 33 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ளது. ஆனால் எதிராக 67 சதவீ தம் வாக்குகள் உள்ளது. அதை இந்தியா கூட்டணி கைப்பற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.
எம்எல்எப் புதிய நிர்வாகிகள் தேர்வு
கோவை, டிச.22- எம்எல்எப் பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் தலைமைச் சங்க நிர்வாகிகள் தேர்தல், கோவை சங்க கட்டடத்தில் நடை பெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவர், சுதந்திர போராட்ட வீரர் தோழர் என்.சங்க ரய்யாவின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர், மூடப்பட்டுள்ள என்டிசி ஆலைகளை ஒன்றிய அரசு உடனடியாக திறக்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங் களை திருத்தி, தொழிலாளர்களுக்கு எதிராக நிறைவேற்றி யுள்ள சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயி ரம் வழங்க வேண்டும். பஞ்சாலை தொழிலை காப்பாற்ற ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, சங்கத்தின் தலைவராக மு.தியாகராசன், பொதுச்செயலாள ராக சு.துரைசாமி, துணைப்பொதுச்செயலாளராக ஏ.பழனி சாமி, பொருளாளராக வி.சீனிவாசன், சட்ட ஆலோசகராக நந்தகோபால் மற்றும் துணைத்தலைவர்கள் 3 பேர், செய லாளர்களாக 4 பேர் மற்றும் 13 பேர் செயற்குழு உறுப்பினர் களாக தேர்வு செய்யப்பட்டனர்.
அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்
கோவை, டிச.22- கோவை மாவட்டம், அன்னூர் தாலுகா பொகலூர் கிராமத் தில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் மாநில நெடுஞ்சாலை துறை மூலம் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. பொகலூர் முதல் ஆனைபள்ளிபுதூர் வரை உள்ள சாலையை அகலபடுத்தி, மாநில நெடுஞ்சாலையாக அமைத்து வருகின்றனர். இந்நிலையில் சில இடங்களில் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் பார பட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அன்னூர் - மேட்டுப்பாளையம் பிரதான சாலையில், பொகலூரில் இருந்து ஆனைபள்ளிபுதூர் செல்லும் நுழைவுப்பகுதியில், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் சாலையை குறுக்கி அமைத்துள்ளனர். இதனால், ஆவேசமடைந்த கிராம மக்கள், பணியில் இருந்த நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஏற்கனவே பல இடங்களில் சாலைகளை விரிவு படுத்த வீடுகள் கூட இடிக்கப்பட்ட நிலையில், பிரதான சாலை யின் நுழைவாயிலில் ஒரு நான்கு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு, அதன் அகலத்தை குறுக்கி விட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் முற்றுகையில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, வரு வாய்த்துறை அதிகாரிகள் மூலம் ஆக்கிரமிப்புகள் சர்வே செய்து முறையாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.
தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
தருமபுரி, டிச.22- தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக்கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக்கூட்டம், மாவட்ட ஆட்சி யர் கி.சாந்தி தலைமையில் வெள்ளி யன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மழைக்காலங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உபரியாக செல்லும் நீரை, தரு மபுரி மாவட்ட பாசனத்துக்கு பயன்படுத் தும் வகையில், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இத்திட் டத்தை நிறைவேற்றுவதன் மூலம், வேளாண் தொழில் மேம்படுவதோடு, பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். தருமபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தக்காளி விலை குறையும்போது, விவசாயிக ளுக்கு ஏற்படும் இழப்பீடுகளை சரி செய்யும் வகையில், தருமபுரி மாவட் டத்தில் தக்காளி சாறு தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கி, உரிய விலை அளித்து தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை போதிய அளவு பொழியாததால், தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண் டும். மயில், காட்டுப்பன்றிகள், யானை கள் உள்ளிட்ட வனவிலங்களால் ஏற் படும் சேதத்துக்கு விரைவாக நிவார ணம் வழங்க வேண்டும். வனவிலங்கு களின் நடமாட்டம், விவசாயிகள் மேற் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முன்கூட்டியே அறி வித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும். வேர்ப்புழுத்தாக்குதலால் கரும்பு விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக ளுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியு றுத்தி பேசினர்.
விழிப்புணர்வு பேரணி
நாமக்கல், டிச.22- சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட் டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவக்குழு சார் பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவம னையிலிருந்து துவங்கிய பேரணி பரமத்திவேலூர் சாலை, மேற்கு ரத வீதி, வடக்கு வீதி, தெற்கு ரத வீதி வழியாகச் சென்று மீண்டும் அரசு மருத்துவமனை அருகே நிறைவடைந்தது. இப்பேர ணியில் சென்ற மாணவ, மாணவிகள் மூலிகைகளை உண்பதால் ஏற்படும் பலன் கள் குறித்து முழக்கங்கள் எழுப்பியபடி சென்றனர்.