districts

அவிநாசி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை

அவிநாசி, டிச.11- அவிநாசி அரசு மருத்துவமனை யில் போதிய மருத்துவர்கள் நியமிக்க  வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் அவிநாசி ஒன்றிய மாநாட்டில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவி நாசி ஒன்றிய மாநாடு தனியார் திருமண  மண்டபத்தில் நடைபெற்றது. இதில், புதிய ஒன்றியச் செயலாளராக முத்து சாமி, துணைச் செயலாளராக கோபால்,  பொருளாளராக சண்முகம்  உள்ளிட்ட 21  பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய் யப்பட்டது. முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் மூத்த நிர்வாகி ஆறுமுகம் மாநாட் டில் கொடியேற்றினார். திருப்பூர் புறந கர் மாவட்ட துணைச் செயலாளர் மோகன் துவக்கி வைத்துப் பேசினார்.  ஒன்றியச் செயலாளர் சண்முகம் பொரு ளாளர் ஷாஜகான் ஆண்டறிக்கை சமர்ப் பித்தனர்.  இதில், மாவட்டச் செயலாளர் இசாக் நிறைவுரையாற்றினார். இம்மா நாட்டில் மாநகராட்சி நகராட்சி பகுதிக ளில் மூன்று வீடுகளுக்கு மேல் ஒருவர் வீடு கட்டினால் மின் இணைப்பு பெற மின்வாரியத்தினர் என்ஓசி சான்றிதழ் வழங்க வேண்டும். ஆனால் அவர்கள்  காலதாமதம் செய்கின்றனர். என்ஓசி உடனடியாக வழங்க வேண்டும். அவி னாசி அரசு மருத்துவமனையில் போதிய  மருத்துவர்கள் இல்லாமல் உள்ளது. 24  மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்றவும், இத்துடன்  கூடுதல் மருத்துவர் களும் நியமிக்க வேண்டும். அவினாசி மங்கலம் சாலையில்  தனி யார் மருத்துவமனை முன்பு  முன் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் நட வடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல் வேறு தீர்மானமானங்கள் நிறைவேற் றப்பட்டது. முடிவில் அய்யாசாமி நன்றி யுரை கூறினார்.