districts

img

ஏற்காடு கோடை விழா தேதியை அறிவிக்க கோரிக்கை

சேலம், மே 12- ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி நடப்பட்ட மலர்கள் பூத்துக்குலுங்கி வரும் நிலையில், கோடை விழா தேதியை விரை வில் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு  “ஏழைகளின் ஊட்டி” என்று அழைக்கப்படு கிறது. இங்கு ஆண்டுதோறும் மே மாத  இறுதியில் கோடை விழா நடத்தப்பட்டு வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடை விழா நடை பெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் மலர்க்கண்காட்சியை கூடுதல் நாட்கள் சேர்த்து நடத்தப்படும் என  மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.  அதனைத்தொடர்ந்து ஏற்காட்டில் 40  வகையான மலர் செடிகளை தோட்டக் கலைத் துறையினர் நடவு செய்தனர். தற் போது அந்த மலர்கள் பூத்துக்குலுங்கி  ரம்மியமாக காட்சியளிக்கிறது. சுற்றுலா  பயணிகள் அதனை கண்டு ரசித்து வருகின்ற னர். இச்சூழலில், தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளா உள்ளிட்ட அண்டை  மாநிலங்களில் இருந்தும் ஏற்காடு கோடை  விழாவிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அள வில் வருகை தர துவங்கியுள்ளனர். எனவே,  மாவட்ட நிர்வாகம் விரைவில் கோடை  விழாவிற்கான தேதியை அறிவிக்க வேண் டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.