districts

img

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர கோரிக்கை

பொள்ளாச்சி, மே 4- பொள்ளாச்சி  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். பொள்ளாச்சி - உடுமலை சாலையில் அமைந்துள்ளது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இம்மருத்து வமனை கடந்த 2009 ஆம் ஆண்டு  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ரூ.3 கோடியே 25 லட்சம்  செலவில் புதியதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு பொதுமக் களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இதனால் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை, கிணத்துக்கடவு, நெக மம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்ட இம்மருத்துவமனையில், ஆயிரக் கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று செல்லும் நிலை யில், குடிநீர் சுத்தமாக கிடைக்காததால் இங்கு தங்கி  சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் முதல் பேறுகாலத்திற் காக அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்கள் வரை பல் வேறு சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, பலர் மருத்துவமனைக்கு வெளியிலுள்ள பேக்கரிகளிலும், உணவகங்களிலும் வாட்டர் கேன்களை தூக்கிச் சென்று தண்ணீர் பிடித்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மருத்துவமனையில் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.