திருப்பூர், நவ. 20 - அனைத்து மாற்றுத் திறனாளி மகளிருக்கும் கலைஞர் மக ளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கம் கோரியுள்ளது. திருப்பூரில் மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலை வர் டி.ஜெயபால், மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ் உள் ளிட்ட நிர்வாகிகள் திங்களன்று திருப்பூர் சார் ஆட்சியர் அலு வலகத்தில் இது குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமை தொகை தகுதியான மக ளிர்க்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாற்றுத் திறனாளி மக ளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மறுக் கப்படுவது வருத்தமளிக்கும் விஷயமாகும். ஆகவே அனைத்து மாற்றுத் திறனாளி மகளிர்களுக்கும் உடனடி யாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க ஆவன செய்ய வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சார் பில் கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள் ளது.