கோவை, செப்.25- தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப் பட்ட குழந்தைக்கு அரசு உதவுமாறு மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் கோரிக்கை விடுத் துள்ளனர். கோவை, கவுண்டர் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர்கள் ரமணக்குமார், ஜனனி தம்பதி யினர். ரமணக்குமார் தனியார் ஐடி கம் பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் களுக்கு மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சிகிச்சை அளிப்பதற்கு ரூ.16 கோடி மதிப் புள்ள ஊசியை செலுத்த வேண்டும் என்ப தால் அரசிடம் உதவி வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், தங்கள் குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்திய நிலையில், தற்போது குழந்தைக்கு தொடை யிலிருந்து முட்டி வரை தசைநார் சிதைவு பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதனை குணப்படுத்த வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு பாகங்களில் உள்ள தசைகள் பாதிக்கப்பட்டு, நுரையீரலும் பாதிப்படையும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரிவித் தனர். இதனை குணப்படுத்துவதற்கு மருத்து வர்களிடம் ஆலோசனையை அடுத்து Zolgen SMA என்ற ஊசியை செலுத்த வேண்டும். அந்த ஊசியின் மதிப்பு ரூ.16 கோடியாகும். இந்த ரூ.16 கோடியை தங்களால் திரட்ட முடியாது. எங்களின் நண்பர்கள் உதவி யுடன் IMPACT GURU என்ற செயலி மூலம் பணத்தை திரட்ட முயற்சி செய்து வரு கிறோம். மேலும், 7845723752 என்ற UPI (PhonePe) மூலமும் பணத்தை பெற்று வரு வதாக தெரிவித்தனர். எனவே, தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினர்.