கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் சாலையில் இருந்து இணைப்பு சாலையாக செல்கிறது துடியலூர் சாலை. இச்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மிகப் பெரிய தொழிற் நிறுவனங்கள், ஏராளமான குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. மேலும், சத்தி சாலையை இணைக்கும் பிர தான சாலையாகவும் உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மற்றும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், இச் சாலை மிகவும் குறுகலான சாலை என்பதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற் படுகிறது. இதுமட்டுமின்றி ரயில்வே கேட் போடப்பட்டால் மிக நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கால விரயம் ஏற்படுகிறது. இச்சாலையில் இருக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அவ் வப்போது பேருந்துகள் மற்றும் கனரக வாக னங்கள் வந்து செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகை யில், இந்த சாலையில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள்விட கனரக வாகனங்கள் அதிகம் செல்கிறது. குறிப்பாக காலை நேரத்தில் இங்கு கேட் போட்டு விட்டால் மிக நீண்ட தூரம் வாகனங் கள் அணிவகுத்து நிற்கும். இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாண வர்கள், வேலைக்குச் செல்வோர் பலரும் சிரமத் திற்குள்ளாகின்றனர். மேலும், இச்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சீராக ஒரு மணி நேரத்திற்கு மேலாகும்.
இதற்கிடையே இப்பகுதியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவ சர ஊர்திகள் போன்ற வாகனங்கள் வந்தால் பெரும் அவதிக்குள்ளாகும். மாநகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறையோ அல்லது மாவட்ட நிர்வாகமோ இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. ஆகவே, இப்பகுதியில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை குறைக்க சாலையை அக லப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் நாளுக்குநாள் வாக னத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதும், போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவது அன்றாட நிகழ்வாக உள்ளது. இதற்கு தீர்வாக இதுபோன்ற இனைப்பு சாலைகளை அகலப்படுத்துவது, மேம்பாலம், தரைமட்ட பாலம் போன்ற திட் டங்களை நிறைவேற்றுவதின் மூலமே எரி பொருட்ச்செலவு, காலவிரயம் ஆகியவற்றை தவிர்க்க முடியும். இதனை ஆட்சியாளர்கள் நிறைவேற்றுவார்கள் என்கிற பொதுமக்களின் நம்பிகையை நிறைவேற்றுவார்களாக... -தினேஷ், கோவை.