districts

தையல் மூலப்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை

உடுமலை, செப்.21- தையல் கலைஞர்கள் பயன்படுத்தும் மூலப்பொருட் களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரி தையல்  கலைஞர் சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள் ளது. திருப்பூர் மாவட்ட தையல் கலைஞர் சங்கத்தின் உடுமலை  மற்றும் மடத்துக்குளம் பகுதியின் சிறப்பு பேரவை, உடுமலை  சிஐடியு அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் தையல் தொழிலுக்கு பயன்படுத்தும் மூலப் பொருட்களுக்கு விதிக்கபட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய  வேண்டும். கிராமப்புற தையல் கலைஞர்களுக்கு இலவச  தையல் இயந்திரம் வழங்க வேண்டும். அரசு பள்ளிகள் மற்றும்  அரசு துறைகளில் சீருடை உள்ளிட்ட வேலைகளை நிறுவனங் களுக்கு தராமல் உள்ளூர் பகுதி தையல் கலைஞர்களுக்கு தர  வேண்டும். நலவாரிய செயல்பாடுகளை மேம்படுத்தி உரிய  காலத்தில் பணப்பலன்களை தர வேண்டும். நியாய விலை கடைகளில் 16 வகையான அத்தியாவசிய பொருட்களை மாதம் முழுவதும் தர வேண்டும். சமையல் எரிவாயு, பெட் ரோல் மற்றும் டீசல் மீதான விலை உயர்வை குறைக்க வேண் டும். அரசு துறையில் இருக்கும் காலி பணியிடங்களை பூர்த்தி  செய்ய வேண்டும். அனைத்து வங்கிகளிலும் தையல் இயந்தி ரம் மற்றும் கடைகள் வைக்க நிபந்தனை இல்லாத கடன்களை  வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. பின்னர் உடு மலை மற்றும் மடத்துக்குளம் பகுதி தையல் தொழிலாளர் சங் கத்தின் கன்வீனராக ரத்தினசாமி தேர்வு செய்யப்பட்டார். துணை நிர்வாகிளாக ஜெகதீசன் மற்றும் செல்லம்மாள் ஆகி யோர் பேரவையில் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த சிறப்பு பேரவையில் தையல் சங்க திருப்பூர் மாவட் டச் செயலாளர் சி.மூர்த்தி, சிஐடியு மாவட்ட துணைச்செய லாளர் எஸ்.ஜெகதீசன், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் எல் லம்மாள் மற்றும் தையல் சங்கத்தின் மாவட்ட துணைத்தலை வர் ரத்தினசாமி உள்ளிட்ட திராளனோர் கலந்து கொண் டனர்.