districts

புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை

சேலம், பிப்.25- சங்ககிரி புதிய பேருந்து நிலைய நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் கடந்த 2009 ஆம் ஆண்டு பேரூ ராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.1.55 கோடியில் புதிய பேருந்து நிலை யம் கட்டப்பட்டது. அதற்கு பிறகு இந்த பேருந்து நிலையம் பயன் பாட்டுக்கு வராமல் இருந்து வருகி றது. சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே பவானி, ஈரோடு, திருச்செங்கோடு, கோவை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்து கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்று வந்தன. அப்பகுதி யில் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டதையடுத்து அப்பேருந்து நிறுத்தம் வட்டாட்சியர் அலுவலக வடக்கு நுழைவாயில் அருகே மாற் றப்பட்டது. தற்போது ஈரோடு,  பவானியிலிருந்து வரும் நகரப்  பேருந்துகள் சங்ககிரி புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லா மல், வட்டாட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்திலேயே திரும் பிச் செல்கின்றன. இதேபோல எடப்பாடியிலிருந்து திருச்செங் கோடு செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் செல்லா மல் பழைய பேருந்து நிலையத்தி லிருந்து திரும்பிச்சென்று வருகின் றன. மேலும் பவானி, ஈரோடு, எடப் பாடியிலிருந்து வரும் பேருந்து களும் புதிய பேருந்து நிலையத் திற்கு செல்லாமல், சங்ககிரியிலி ருந்து சேலம் செல்லும் வழிகளில் பல் வேறு இடங்களில் திரும்பிச் செல் கின்றன. தற்போது கொங்கணாபுரம் அருகே மேம்பால பணிகளுக்காக பேருந்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதைய டுத்து, ஓமலூரிலிருந்து சங்ககிரி வழியாக வரும் அனைத்து பேருந் துகளும் பழைய பேருந்து நிலை யத்தையொட்டி செல்லும் புதிய  எடப்பாடி சாலை வழியாக எடப்பா டிக்கு சென்று வருகின்றன. இப் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையம் வருவதில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் சங்ககிரி பேரூராட்சி, காவல் துறை சார்பில் புதிய பேருந்து நிலையத்திற்கு வெளியே பேருந்துகள் மெதுவாக செல்வதற்காக தடுப்புகள் ஏற்ப டுத்தப்பட்டிருந்தன. அதில் பேருந் துகள் மெதுவாக செல்லும் போது  அப்பேருந்துகளில் ஏறி பொதுமக் கள் சங்ககிரி நகருக்கு வந்து சென் றனர். தற்போது அவைகள் அகற் றப்பட்டுவிட்டதையடுத்து, சேலத்தி லிருந்து வரும் பேருந்துகள் புதிய பேருந்து நிலைய பேருந்து நிறுத் தத்தில் நிற்காமல் சென்று விடுவ தால் சுற்றுவட்டார கிராமப்பகுதி களைச் சேர்ந்த மக்கள் அவதிய டைந்து வருகின்றனர். எனவே பவானி, எடப்பாடி, ஈரோடு, திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் இருந்து வரும் அரசு  நகர பேருந்துகள் சங்ககிரி வட்டாட் சியர் அலுவலகம் அருகே செயல் படும் தற்காலிக பேருந்து நிறுத்தத் தில் திரும்பாமல் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று திரும்பி வருவதற்கு மாவட்ட நிர்வாகம் உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண் டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.