கோவை, ஜன.24- கோவையில் பல்வேறு பள்ளிகளிலும் குடியரசு தினத்திற் கான கலை நிகழ்ச்சி ஒத்திகை நடைபெற்று வருகிறது. நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. கோவையில் வழக்கமாக குடியரசு தினத்தில் மாணவ, மாண விகளின் கலை நிகழ்ச்சிகள் வ.உ.சி மைதானத்திலும், பள்ளி கல்லூரி வளாகங்களிலும் நடைபெறுவது வழக்கம். அதன் படி கோவையில் உள்ள பல்வேறு பள்ளி கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை யில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை அவி னாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் குடியரசு தின கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் குழு நடனம், தனி நபர் நடனம், வெவ்வேறு விதமான டிரில்கள், பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு ஒத்திகையில் ஈடு பட்டு வருகின்றனர்.