districts

img

குடியரசு தினம்: போலீசார் சோதனை

தருமபுரி, ஜன.18- குடியரசு தின விழாவை முன்னிட்டு, தருமபுரியில் முக்கிய  இடங்களில் மோப்பநாய் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீ சார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஜன.26 ஆம் தேதியன்று குடியரசு தினவிழா நடைபெறு வதையொட்டி, தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக தருமபுரியில் உள்ள முக்கிய இடங்களை மோப்ப நாய் மற்றும்  வெடி மருந்து நிபுணர்களைக் கொண்டு ஆறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தருமபுரி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஸ்டீபன்ஜேசுபாதம் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் இந்த சோதனையானது ஜன.26 ஆம்  தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது தருமபுரி ரயில் நிலையம், பேருந்து நிலையம் அரசு மருத்துவமனை, மக்கள்  அதிகம் கூடும் இடமான கடைவீதி ஆகிய இடங்களில் இச்சோ தனை நடைபெற்றது. தருமபுரி வெடிமருந்து பிரிவின் சிறந்த நாய், அதனை கையால்பவர் முரளி, காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன், முதல் நிலை காவலர் சக்திவேல் ஆகியோர் இச்சோதனை மேற்கொண்டனர்.