districts

img

மாணவர், வாலிபர், மாதர் சங்கம் சார்பில் குடியரசு தின உறுதிமொழி ஏற்பு

ஈரோடு, ஜன.28- மாணவர், வாலிபர், மாதர் சங்கத்தின் சார்பில் 73 ஆவது குடியரசு தினத்தை முன் னிட்டு விடுதலை போராட்ட வீரர்களின் உருவ முகமூடி அணிந்து உறுதிமொழி ஏற்பு  நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணி வித்து இந்திய அரசியலமைப்பு முகப் புரை வாசித்து உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாணவர் சங்க மாவட்ட செயலாளர் செ.நவீன்குமார் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன், வாலிபர் சங்க மாவட்ட  தலைவர் வி.ஏ.விஸ்வநாதன், தாலுகா செயலாளர் செ.அஜித்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விடுதலை போராட்ட வீர்ர்களின் முகக்கவசம் அணிந்து ஊர் வலம் மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்வு கள் நடைபெற்றது. கோவை சிவானந்த புரத்தில் நடைபெற்ற நிகழ்வில் வாலிபர் சங்க மாநில துணைச்செயலாளர் பால சந்திரபோஸ் கலந்து கொண்டார். இதே போல் அன்னூர், இருகூர், உடையாம் பாளையம், கணபதி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்வில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஸ்டாலின்குமார், செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் குடியரசு தின உறுதிமொழியேற்பு நிகழ்வு நடை பெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஏ.ராதிகா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.