districts

img

அரசாணைகள் 115, 139யை ரத்து செய்திடுக

தருமபுரி, செப்.3- அரசாணைகள் 115, 139 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அரசு ஊழியர் சங்கத்தின் தருமபுரி வட்டப்பேரவை கூட்டம் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில், வட்ட தலைவர் ரேகா தலைமையில் நடைபெற்றது. இணைச்செயலாளர் சரத்குமார் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் சி.காவேரி கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினர். செயலாளர் பிரின்ஸ் வேலையறிக்கையை முன்வைத்தார். மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயவேல், அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்க செயலாளர் பி.முனிராஜ், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க தலைவர் முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இக்கூட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணைகள் 115, 139 மற்றும் 152யை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் வட்ட செயலாளராக ஸ்ரீநாத், துணைத்தலைவர்களாக தமிழ்மணி, சக்தி, துணைச்செயலாளராக லோகநாதன், சின்னசாமி, பொருளாளராக ரீனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள் நிறைவுரையாற்றினார்.