districts

img

பள்ளி செல்லும் சாலையை சீரமைத்திடுக - மாணவர்கள் மறியல்

தருமபுரி, மார்ச் 20- ஏரியூர் அருகே அரசு பள்ளிச் செல்லும் பழுதடைந்த சாலையை சரி செய்தும், பள்ளியில் மாணவர் களுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அரசு  பள்ளி மாணவர்கள் சாலை மறிய லில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரப ரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே சீலநாயக்கனூர், ஊர்நத்தம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். சீலநாயக்கனூர், ஊர் நத்தம், பேகியம் புதுக்காடு, தாளப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார்  200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் ஊர் நத்தம் பகுதியில் உள்ள அரசு  உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.  இப்பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுகிறது. இதனை மது பிரி யர்கள் வாங்கி பள்ளிக்குச் செல் லக்கூடிய சாலையில் அமர்ந்து மாலை வேளையில் மது குடித் துவிட்டு, கண்ணாடி பாட்டில்களை சாலையில் உடைத்து விட்டு செல் கின்றனர். பள்ளியிலிருந்து சைக் கிள் மற்றும் நடந்து செல்லும் போதும்  கேலி செய்கின்றனர். மது குடிப்போ ரிடமிருந்து தப்பித்து சென்றால் உடைக்கப்பட்ட கண்ணாடி பாட்டில் களால் விபத்து ஏற்படும் நிலை ஏற் பட்டுள்ளது. மேலும், அரசு உயர்நி லைப்பள்ளியில் போதுமான குடிநீர் வசதி இல்லை. சீலநாயக்கனூர் பிர தான சாலையிலிருந்து பள்ளிக் குச் செல்லக்கூடிய பழுதடைந்த சாலையினை சரி செய்ய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாண வர்கள் சீலநாயக்கனூர் - பென்னா கரம் செல்லும் சாலையில் அமர்ந்து  பதாகைகள் ஏந்தியவாறு முழக்கங் களை எழுப்பி மறியலில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சி.வி.மாது, தொன்னகுட்ட அள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி தங்கராஜ், ஏரியூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர்கள், சீலநாயக்கனூர் ஊர் நத்தம் பகுதி யில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிக்கு செல்லக்கூடிய பழுதடைந்த சாலை  சரி செய்வதற்காக ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் பள்ளி வளாகத்தில் அமைக் கப்பட்டுள்ள புதிய ஆழ்துளை கிண றுக்கு மோட்டார் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இத னையேற்று மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.