districts

img

தூர்ந்த வாய்க்காலை சீரமைத்திடுக - விவசாயிகள் கோரிக்கை

 உடுமலை, மார்ச் 19- தூர்ந்த வாய்க்காலை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  உடுமலை அருகே உள்ள  திருமூர்த்தி அணையி லிருந்து பிஏபி திட்டத்தின் கீழ்  பல லட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு வாய்க்கால் மூலம்  பாசனம் வசதி பெறு கின்றன.  இந்த வாய்க்கால் களை பொதுபணித்துறை சார்பில் பராமரிப்பு செய் யப்படுகின்றன. தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. இந்நிலையில்,  வாய்கால் கரையில் மின் கம்பங்கள் நடுவதாலும், சாலை விரிவாக்க பணி களால் வாய்க்கால் தூர்ந் துள்ளது. இந்நிலையில், பொது பணித்துறையினர், முதன் மை வாய்க்கால்களை மட்டும் சீரமைக்கின்றனர். இதில், கிளை வாய்க்கால் களை கண்டு கொள்ளுவ தில்லை. இந்த வாய்க்கால் கள் வருவாய்த்துறை ஆவ ணத்தில் மட்டுமே உள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள வீட்டு மனை உரிமை யாளர்கள் ஆக்கிரமிப்பை பொதுப் பணித்துறை அதி காரிகளின் கண்டு கொள்ளு வதில்லை. எனவே, இப்பகுதி விவ சாயிகளின் நலன்கருதி பரம்பிக்குளம்-ஆழியார்  திட்டத்தின் பாசன கால்வாய் களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.