திருப்பூர், ஏப்.12- பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதால், வாடகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி திருப்பூரில் ரெட் டேக்சி நிறுவனத்திற்கு கார் ஓட்டும் கார் உரிமையாளர்கள் ஒருநாள் அடை யாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் 300க்கும் மேற்பட்ட வர்கள் ரெட் டேக்சி நிறுவனத்தில் தங்க ளது கார்களை ஒப்பந்தத்தின் அடிப்ப டையில் வாடகைக்கு ஓட்டி வருகின்ற னர். இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தின் காரணமாக தங்களுக்கு முறையான வாடகை கிடைப்பதில்லை என்றும், இணைய தளத்தின் மூலமாக பதிவு செய்யும் குழப்பங்களை சரி செய்து தர வேண் டும். தொலைபேசி வாயிலாக பதிவு செய்யும் முறையை கடைபிடிக்க வேண்டும் என்றும், வாடகை தொகை ஒரு மணி நேரத்திற்கு 250 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும். இரவு நேரங்களில் கார்களை வாடகைக்கு எடுப்பவர்களுக்கு ரெட் டேக்சி நிர்வா கம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ரெட் டேக் சிக்கு வாடகைக்கு ஓட்டும் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங் களை நிறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர். மேலும், ரெட் டேக்ஸி நிர்வாகத் திற்கு ஒரு மாத காலமாக முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லாத நிலை யில், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தாகவும், கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டால் தொடர் போராட்டத் தில் ஈடுபட போவதாகவும் கார் உரி மையாளர்கள் தெரிவித்துள்ளனர்.