பொதுமக்கள் கோரிக்கை ஈரோடு, டிச. 29- சத்தியமங்கலம் வட்டத்திற்குட் பட்ட புங்கம்பள்ளி மின்வாரிய அலுவல கம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலை யில் இருப்பதால் உடனடியாக சீர மைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங் கலம் வட்டம், புளியம்பட்டி உபகோட் டத்திற்குட்பட்டது புங்கம்பள்ளி இள மின் பொறியாளர் மின்வாரிய அலுவல கம். இங்கு, இளமின் பொறியாளர், வரு வாய் மேற்பார்வையாளர், கணக்கீட்டு ஆய்வாளர், கணக்கீட்டாளர், முகவர் இருவர், வணிக உதவியாளர், வணிக ஆய்வாளர், மின்பாதை ஆய்வாளர் ஒருவர், கம்பியாளர்கள் 4 பேர் உள் ளிட்ட 13 பேர் இவ்வலுவலகத்தில் பணி யாற்றி வருகின்றனர். இதில் மின் பாதை ஆய்வாளர் மற்றும் கம்பியா ளர்கள் தவிர மற்ற அனைவரும் அலுவ லகத்தில் அமர்ந்து வேலை செய்து வருகின்றனர்.
மின்வாரியத்திற்குச் சொந்தமான கட்டடம் இல்லாததால் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்குச் சொந்த மான கட்டடத்தில் கடந்த 10 ஆண்டுக ளுக்கு மேலாக இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவல கம் இதுவரை எந்த பராமரிப்பு பணி யும் நடைபெறவில்லை. மின் கட்டணம் செலுத்த கவுண்டர் இல்லை. பணியாளர் களுக்கு கழிவறைகள் எதுவும் இல்லை. இதில் பெண் பணியாளர்கள் பாடு மிக வும் சிரமத்திற்குரியது. இதனை சீர மைத்துக் கொடுக்க கோரிக்கை விடுத் தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட் டால் அந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டுகிறோம் என்கின்ற னர். வேறு இடமும் பார்த்து இடம் பெய ராமல் மின்வாரிய அலுவலகம் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டடம் மிகவும் பழு தடைந்து எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கான்கிரீட் மேற்கூ ரைகள் பெயர்ந்து சிதிலமடைந்து கம்பி கள் வெளியே தெரிகிறது. இதனால் உயிர் பயத்துடன் எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழலில் இருக்கும் மின் வாரிய அலுவலகத்தை ஊழியர்கள் பொதுமக்கள் நலன் கருதி வேறு இடத் திற்கு இடமாற்றம் செய்திட வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.