தருமபுரி, அக்.9- பாலக்கோடு புறவழிச்சாலை பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள 3 மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள னர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு புறவழிச்சாலை பகுதியில் உள்ள சின்னாரதனஹள்ளி பிரிவு சாலையில் டிரான்ஸ்பர்மர் உள் ளது. இதை சுற்றியும் நெடுஞ் சாலையேரம் 3 மின்கம்பங்கள் பழு தாகி கம்பிகள் வெளியே தெரிந்தவாறு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் புறவழிச்சாலையில் பள்ளி கல்லூரி வாகனங்கள் நகர அரசு பேருந்துகள் தனியார் பேருந்துகள் என அனைத்தும் தற்போது புறவழிச்சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருவதால் எப்போது வேண்டு மானாலும் இந்த மின்கம்பம் கீழே விழும் ஆபத்து உள்ளது. விபத்து ஏற்படும் முன்பு மூன்று மின்கம்பங்களையும் மின்சார வாரியம் உடனடியாக அகற்றி புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும் எனவும், வரும் வடக்கிழக்கு பருவ மழைக்கு முன்பு இந்த மின்கம்பங்களை மாற்றி அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.