நாமக்கல், மே 7- காலவதியான டோல்கேட்டுகளை அகற்றிட வேண் டும் என நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஐந்து பனை அருகே வீரமாத்தி கோவிலில் மாவட்ட மோட்டார் இன்ஜி னியரிங் தொழிலாளர் சங்க கிளை மகாசபை நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு பொருளாளர் சவாமிநாதன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம். அசோகன் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பின்பு சங்க மாவட்டச் செயலாளர் எஸ். சுரேஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில், சாலை ஓரங்களில், ஆட்டோ டெம்போ ஓட்டுநர்களுக்கு ஓய்வு வரை ஏற்படுத்திட வேண்டும். நல வாரிய பணப்ப யன்களை உயர்த்தித் தரவேண்டும். வீடு இல்லாத ஓட்டுநர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். காலாவதியான டோல்கேட்களை மூட வேண்டும். மேலும் பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட விலைகளை குறைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, மாநாட்டில் தலைவராக செந்தில்கு மார், செயலாளராக தங்கவேல், பொருளாளராக சுவாமி நாதன், துணைத் தலைவராக சக்திவேல், துணைச் செய லாளராக குப்புராஜ், கமிட்டி உறுப்பினர்கள் சேகர், பால சுப்பிரமணியம் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.