தருமபுரி, ஜன.12- மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரகத்தில், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து, தருமபுரி மாவட்ட கல்வி அலுவ லர் நடவடிக்கை எடுத்துள்ளார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பெருங்காடு மலைக்கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 500க் கும் பழங்குடியின மக்கள் வசித்து வரு கின்றனர். இக்கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்ற னர். பள்ளியில் தலைமை ஆசிரியை யாக கலைவாணி மற்றும் 5 ஆசிரியர் கள் பணிபுரிந்து வருகின்றனர். இந் நிலையில், இப்பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையை சுத்தம் செய்வது, கழிவறை தொட்டியில் தண்ணீர் நிரப்பு வது, பள்ளியை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும் என்று 5 ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளை தலைமை ஆசிரியர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர் களிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச் சியடைந்த பெற்றோர், கல்வி கற்பதற் காக பள்ளிக்கு அனுப்பப்படும் மாணவ, மாணவிகளை துப்புரவு பணியில் ஈடு படுத்தும் தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகளிடம் புகாரளித்தனர். மேலும், ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதுகுறித்து, விசாரணை நடத்த தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா உத்தரவிட் டார். இதைத்தொடர்ந்து பெருங்காடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு தருமபுரி மாவட்ட கல்வி அலுவலர் தென்றல் நேரில் சென்று மாணவிகளிடம் விசா ரணை நடத்தினார். இதேபோல் பாலக் கோடு வட்டாட்சியர் ரஜினி, காவல் ஆய் வாளர் சுப்பிரமணி ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப் போது பள்ளி மாணவிகளை ஆசிரியர் கள் கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணியை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட கல்வி அலுவ லர் தென்றல் உத்தரவிட்டார்.