கோவை, ஜூலை 27- கோவையில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஆவின் பூத்து கள் மற்றும் பெட்டிக்கடை கள் அகற்றப்பட்டு வருகின் றன. கோவை மாநகராட்சி யில் ஆக்கிரமிப்புகள் மிகவும் தீவிரமாக அகற்றப்பட்டு வரு கின்றன. இதனிடையே கோவை கிழக்கு மண்டல உதவி நகர மைப்பு அலுவலர் பாபு தலைமையில், டைடில் பார்க் பகுதி களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது அனுமதி யின்றி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆவின் பூத்துகள், 4 பெட் டிக்கடைகள் போன்றவைகள் அகற்றப்பட்டன. மேலும், மாநக ராட்சி அனுமதியின்றி கடைகளை மீண்டும் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்க ளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.