திருப்பூர், மார்ச் 23- காங்கேயம் அருகேயுள்ள உல குடையார்பாளையத்தில் வைக்கப் பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்பு பதாகையை அதிகாரிகள் அகற்றி னர். காங்கேயம், நத்தக்காடையூர் ஊராட்சிக்குள்பட்ட உலகுடையார் பாளையத்தில் உள்ள தரைப்பாலம் மிகவும் சேதமடைந்துள்ளது. இந்த பாலத்தை சீரமைக்க வலியு றுத்தி அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தரைப்பாலத்தை சீரமைக்க வலியு றுத்தி, உலகுடையார்பாளையத்தில் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டுள்ளது. அதில், உலகுடையார் பாலத்தை சீரமைக்காததால் தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற காங்கேயம் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் பதாகையை அகற்றினர்.