பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்
உதகை, அக்.5- பயணிகளிடம் ஒருமையில் பேசியதாக அரசு பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். கோவை கோட்டத்திற்குட்பட்ட நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி-1, ஊட்டி-2, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், மேட்டுப் பாளையம்-1 ஆகிய அரசு போக்குவரத்து கழக பணிமனை கள் உள்ளன. இதில் கேரளம், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்குள் என 270 வழித்தடங்களில் 335 பேருந்து கள் இயக்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் அரசு பேருந்தை பயன்படுத்து கின்றனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.38 லட்சம் வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில், மாவட்டத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்து கள் இயக்க வேண்டும் என்றும், ஆட்கள் பற்றாக்குறையால், இருக்கும் ஊழியர்களே ஓய்வின்றி பணியாற்றுவதால், மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். உடனடியாக காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும் என தொடர்ந்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து இயக்கங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், வியாழனன்று உதகையில் இருந்து கேரளம், கள்ளிக்கோட்டை பகுதிக்கு அரசு பேருந்து புறப் பட்டு சென்றது. இதில் ஊட்டி கிளையில் பணியாற்றும் பாபு என்பவர் நடத்துநராக இருந்தார். இதைத்தொடர்ந்து கூடலூரில், பேருந்தில் மாணவ- மாணவிகள் ஏறினர். இதன்பின்னர் பந்தலூர் - சேரம்பாடி அருகே உள்ள காபிக்காடு பகுதியில் மாணவ- மாணவிகள் இறங்க வேண்டும் என கூறினர். தொலை தூரம் செல்லும் பேருந்து என்பதால் எல்லா இடத்திலும் நிறுத்த முடியாது என்று நடத்துநர் மறுத்து விட்டு, அதன் பின்னர் பேருந்தை நிறுத்தினார். அப்போது மாணவ - மாணவிகள் இறங்கிக் கொண்டனர். இதற்கிடையே பேருந்தில் இருந்த பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் தானே அனுசரித்து இறக்கி விடுங்கள் என்று கூறினர். இதனால் ஆத்திரமடைந்த நடத்துநர் பாபு, இது என்ன லோக்கல் வண்டியா? கள்ளிக்கோட்டை போய் சேர வேண் டாமா? அதிகாரியின் போன் நம்பர் தருகிறேன் வேண்டு மென்றால் பேசிக் கொள்ளுங்கள் என்று ஒருமையில் பேசி உள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை பேருந்தில் பயணித்த சிலர் வீடியோ வாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மேலும் இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதன் பேரில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசா ரணை நடத்தி, பயணிகளிடம் கனிவாக நடக்காமல் அவப் பெயர் ஏற்படுத்தியதாக கூறி நடத்துநர் பாபுவை பணி யிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
உடற்தகுதி குறித்து விழிப்புணர்வு மாரத்தான்
ஈரோடு, அக்.5- உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே எற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலகம் சார்பில் மாரத் தான் ஓட்டம் நடைபெற உள்ளது. அதன்படி அக்.7 ஆம் தேதியன்று காலை 8 மணி முதல் வஉசி பூங்கா விளை யாட்டரங்கிலிருந்து இப்போட்டிகள் துவங்குகிறது. இப்போட்டியில் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாணவரல்லாதோர் மற்றும் பொதுமக்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறு பவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், இரண்டாமிடம் பெறுபவர் களுக்கு தலா ரூ.3 ஆயிரம், மூன்றாமிடம் பெறுபவர் களுக்கு தலா ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 ஆம் இடம் வரை பெறுபவர்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கும், போட்டிகள் முன்பதிவிற்கும் மாவட்ட விளையாட்டு அலுவலத்திலும், 9788736392, 7708832432 என்ற எண்ணிற்கு SMS Space Anna Marathan Name /Age /Male or Female/ Mobile Number என டைப் செய்து குறுஞ்செய்தி மூலமும் அல்லது நேரில் அணுகியும் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
நீர் வெப்ப திரவமாக்கல் உலை வடிவமைப்புக்கு காப்புரிமை
கோவை, அக்.5- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழ கத்தில் நீர் வெப்ப திரவமாக்கல் கலன் வடிவ மைப்புக்கு தேசிய காப்புரிமையைப் பெற் றுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரி வித்துள்ளது. இது குறித்து வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல் துறை யின் விஞ்ஞானிகளான முனைவர் ர.திவ்ய பாரதி மற்றும் முனைவர் ப.சுப்பிரமணியன் ஆகியோர்களின் மூலம் நீர் வெப்ப திரவமாக் கல் கலனுக்கான தேசிய காப்புரிமையைப் பெற்றுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அலுவலகத்தால் இந்த காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. நீர்வெப்ப திரவமாக்கல் அமைப்பானது கலக்குவான், வெப்பப்படுத்துவான் மற்றும் குளிர்வி ஆகிய பாகங்களைக் கொண்ட உயர் அழுத்தக் கலனாகும். இக்கலனானது, ஈரத்தன்மை அதிகமுள்ள உயிரிக் கழிவுகளி லிருந்து உயிரி எண்ணெய் உற்பத்தி செய்ய உதவுகிறது. நீர்வெப்ப திரவமாக்கல் முறை யில் கரி மற்றும் நீர்திரவம் ஆகியவை உப பொருளாக கிடைக்கின்றன. உயிரி எண் ணெயை நேரடியாக உலைகளில் எரி பொரு ளாகவும், சுத்திகரித்து வாகனங்களில் எரி பொருளாகவும் பயன்படுத்தலாம். கரி யானது, திட உயிரி எரிபொருளாக பயன் படுவதுடன் மண் வளத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இம்முறையில் பெறப்படும் மற்றொரு உபபொருளான நீர்திரவம் அங்கக இரசாயனங்கள் மற்றும் ஊட்டச்சத்துகளைக் கொண்டது. இதிலுள்ள இரசாயனங்களை தொழிற்சாலைகளில் உகந்த முறைகள் மூலம் பிரித்தெடுத்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நூற்றாண்டு நிறைவு விழா கூட்டம்
திருப்பூர், அக். 5 - கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நூற்றாண்டு நிறைவை ஒட்டி சிறப்பு கூட்டம் திருப்பூர் மக்கள் மாமன்றத் தில் புதன்கிழமை நடைபெற்றது . மக்கள் மாமன்ற பொருளாளர் சு.சுந்தரேசன் தலைமை யில் ராகதீபம் ராஜா இக்கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசி னார். எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் படைப்புகள் மற்றும் கரிசல் காட்டுக் கதைகள் பற்றி கவிஞர் நாதன் ரகுநாதன் பேசி னார். கி.ராஜநாராயணன் பற்றி 170 எழுத்தாளர்களின் கட்டுரை களை வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தொகுத்து 1200 பக்கங்கள் கொண்ட இரண்டு தொகுதி நூல்களாக வெளி யிட்டிருக்கிறார். இந்த நூல் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக திருப்பூர் குமரன் பிறந்த தினத்தை ஒட்டி அவ ருக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரைப் பற்றி கவிஞர் ஆ.அருணாச்சலம் நினைவு கூர்ந்து பேசினார். திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் உள்ள நூலகம் செயல்பட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நூலகர் வின்சென்ட் ராஜ் நன்றி கூறினார்.
ஏழு வாரமாக சம்பளப் பாக்கி உடனடியாக வழங்க வலியுறுத்தல்
திருப்பூர், அக்.5 - பொங்கலூர் ஒன்றியம் தொங்குட்டிபாளையம் ஊராட் சியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்கும் படி ஒன்றிய கவுன்சிலர் ஜோதி பாசு வலியுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு ஒன்றிய கவுன்சிலர் ஜோதிபாசு வியாழனன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது: தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்த ஊராட்சியில் 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கடந்த ஏழு வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இத னால் வயதான பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் அன் றாட செலவுக்கு பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படு கின்றனர். எனவே இந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜோதிபாசு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அரசுப்பள்ளியில் சந்திரயான் விழிப்புணர்வு நிகழ்வு
திருப்பூர், அக். 5 – திருப்பூர் மாநகராட்சி செல்லப்பபுரம் நடு நிலைப் பள்ளியில் வியாழனன்று சந்தி ரயான் 3 பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு நடை பெற்றது. இந்நிகழ்வுக்கு மங்கைபாரதி பதிப்பகம் அ.கந்தசுவாமி தலைமை ஏற்று வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் வி.புவனேஸ்வரி சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையம், சந் திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் தரையி றங்கியது பற்றி எடுத்துரைத்தார். இந்த திட் டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகள், அவர்க ளது பணிகள் குறித்தும் மாணவர்களிடம் எடுத்துக் கூறினார். சந்திரயான் பற்றி வந்த படங்கள், கட்டுரைகள் மாணவர்கள் பார் வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கண்டு களித்தனர். உதவி தலைமை ஆசிரியை அ.சுமதி நன்றி கூறினார்.
ஒப்பந்தப்படி சம்பள உயர்வு: தொழிலாளர்கள் கேட்டுப் பெற சிஐடியு அறிவுறுத்தல்
திருப்பூர், அக். 5 – சம்பள ஒப்பந்தப்படி 4 சதவிகித சம்பள உயர்வை தொழிலாளர்கள் வேலை செய்யும் பனியன் தொழிற் சாலைகளில் கேட்டுப் பெறும்படி சிஐ டியு பனியன் பொதுத் தொழிலாளர் சங்கம் கூறியுள்ளது. திருப்பூர் பனியன் தொழிலாளர் களுக்கு சம்பள உயர்வு வழங்குவ தற்கு பின்னலாடை உற்பத்தியாளர் சங்கங்களுக்கும், பனியன் தொழிலா ளர் சங்கங்களுக்கும் இடையே கடந்த 2021ஆம் ஆண்டு புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. நான்காண்டு கால சம்பள உயர்வு ஒப் பந்தப்படி 2021ஆம் ஆண்டு அக்டோ பரில் 19 சதவிகிதம் சம்பள உயர்வும், இரண்டாம் ஆண்டான 2022ஆம் ஆண்டு அக்டோபரில் 5 சதவிகிதம் சம்பள உயர்வும், மூன்று மற்றும் நான் காம் ஆண்டுகளில் தலா 4 சதவிகிதம் சம்பள உயர்வும் வழங்குவது என்று இந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி 2023ஆம் ஆண்டு அக் டோபர் 1ஆம் தேதியில் இருந்து 4 சத விகித சம்பள உயர்வு அமலுக்கு வர வேண்டும். எனவே திருப்பூரில் ஏற்று மதி மற்றும் உள்நாட்டுப் பிரிவில் வேலை செய்யக்கூடிய அனைத்து தொழிலாளர்களும் இந்த சம்பள உயர்வுத் தொகையை அந்தந்த தொழிற்சாலை நிர்வாகங்களிடம் கேட்டுப் பெற வேண்டும் என்று சிஐ டியு பனியன் சங்கப் பொதுச் செய லாளர் ஜி.சம்பத் கூறியிருக்கிறார். யார், யாருக்கு எவ்வளவு? அதன்படி பனியன் தொழிற் சாலைகளில் நாளொன்றுக்கு 8 மணி நேர வேலைக்கு, கட்டிங், டைலர், அயர்ன், பேக்கிங், சிங்கர் பிரிவு தொழிலாளர்கள் அடிப்படைச் சம்ப ளம் ரூ.270.35-க்கு 4 சதவிகித உயர்வு என்ற அடிப்படையில் ரூ.10.81, பஞ் சப்படி ரூ.206.30, பயணப்படி ரூ.25 சேர்த்து மொத்தம் ரூ.512.46 பெற வேண்டும். அதேபோல் செக்கிங் தொழிலாளர்கள் அடிப்படைச் சம்ப ளம் ரூ.154.36-க்கு 4 சதவிகித உயர்வு ரூ.6.17, பஞ்சப்படி ரூ.206.30, பயணப் படி ரூ.25 சேர்த்து மொத்தம் ரூ.391.83 பெற வேண்டும். லேபிள் பிரிவு தொழிலாளர்கள் அடிப்படைச் சம்பளம் ரூ.139.03க்கு 4 சதவிகித உயர்வு ரூ.5.56, பஞ்சப்படி ரூ.206.30, பயணப்படி ரூ.25 சேர்த்து மொத்தம் ரூ.375.89 பெற வேண்டும். கைமடித்தல் பிரிவு தொழிலாளர்கள் அடிப்படைச் சம்பளம் ரூ.135.24க்கு 4 சதவிகிதம் உயர்வு ரூ.5.40, பஞ்சப்படி ரூ.206.30, பயணப்படி ரூ.25 சேர்த்து மொத்தம் ரூ.371.94 பெற வேண்டும். டேமேஜ் பிரிவு தொழிலாளர்கள் அடிப்படைச் சம்ப ளம் ரூ.108.05க்கு 4 சதவிகிதம் உயர்வு ரூ.4.32, பஞ்சப்படி ரூ.206.30, பயணப் படி ரூ.25 சேர்த்து மொத்தம் ரூ.343.67 பெற வேண்டும். அடுக்குதல் பிரிவு தொழிலாளர்கள் அடிப்படைச் சம்ப ளம் ரூ.77.40க்கு 4 சதவிகிதம் உயர்வு ரூ.3.09, பஞ்சப்படி ரூ.206.30, பயணப் படி ரூ.25 சேர்த்து மொத்தம் ரூ.311.79 பெற வேண்டும். மிஷின் பிரிவு தொழி லாளர்கள் அடிப்படைச் சம்பளம் ரூ. 251.91க்கு 4 சதவிகிதம் உயர்வு ரூ.10, பஞ்சப்படி ரூ.206.30, பயணப்படி ரூ.25 சேர்த்து மொத்தம் ரூ.493.21 பெற வேண்டும். ஒப்பந்தப்படி மேற்காணும் சம்ப ளத்தை விட நடைமுறையில் கூடுதல் சம்பளம் பெற்று வந்தால் அவர்க ளும் தற்போது பெற்று வரும் சம்ப ளத்தில் இருந்து 4 சதவிகிதம் சம்பள உயர்வு கேட்டுப் பெற வேண்டும். பீஸ் ரேட், காண்ட்ராக்ட் என அனைத்துப் பிரிவுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களும் இந்த சம்பள உயர்வைக் கேட்டுப்பெற வேண்டும். ஒப்பந்தப்படி சம்பள உயர்வை நிறுவனங்கள் வழங்க மறுத்தால் தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தைத் தொடர்பு கொள்ளும்ப டியும் ஜி.சம்பத் கேட்டுக் கொண் டிருக்கிறார்.
ஆயுள் தண்டனை
திருப்பூர், அக். 5 - திருப்பூரை அடுத்த அவி னாசிபாளையம் அருகே வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (50). கூலித்தொழிலாளி. இவரு டைய மனைவி சாந்தி (40). கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று கணவன்-மனைவிக்கு இடையே தக ராறு ஏற்பட்டு முருகன், கல் லால் தாக்கி சாந்தியை கொலை செய்தார். இதுதொ டர்பாக அவினாசிபாளையம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன் றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வியாழன் அன்று தீர்ப்பு கூறப்பட்டது. மனை வியை கல்லால் தாக்கி கொலை செய்த குற்றத் துக்கு முருகனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.
பழுதடைந்த சாலை: மக்கள் அவதி புதிய தார்ச்சாலை கேட்டு மறியல்
சேலம், அக்.5- காடையாம்பட்டி அருகே பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதால், புதிய தார்ச் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கணவாய்புதூர் ஊராட்சிக்குட்பட்ட வீராச்சியூர், கண்ணப் பாடி, கோவில்பாடி, சுரக்காப்பட்டி, கொலகூர், கரடியூர் உள் ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமானோர் வசித்து வரு கின்றனர். இந்த கிராமங்கள் மலைப்பகுதியில் அமைந்துள் ளன. இந்நிலையில், வியாழனன்று காலை இந்த கிராமங்க ளைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி குழந்தைகளுடன் கண வாய்புதூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து தீவட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன், வனத்துறையினர், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். அப்போது போராட்டக்காரர்கள் கூறுகையில், கணவாய்புதூர் பகுதியிலிருந்து கண்ணப்பாடிக்கு சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இங்கு தார்ச்சாலை அமைக்கப் பட்டு சுமார் 7 வருடங்களுக்கு மேல் கடந்த நிலையில், சாலை முழுவதும் பழுதடைந்துள்ளது. இதனால் பள்ளி குழந்தை கள், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமப் பட்டு வருகின்றனர். மேலும், விடுமுறை நாட்களில் கர்நாடகா, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் கணவாய் புதூர் வழியாக ஏற்காடு சென்று வருகின்றனர். இந்த பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். எனவே, புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என அதி காரிகளை சந்தித்து மனு வழங்கியும் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட தாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உயரதிகாரி களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் தெரிவித்தனர். இதனையேற்று பொதுமக்கள் தற்காலிக மாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஏடிஎம்-மில் கொள்ளை முயற்சி
ஈரோடு, அக்.5- ஈரோட்டில், கனரா வங்கி கிளையின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்ததையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம், சத்தி சாலையில் கனரா வங்கி கிளை மற்றும் ஏடிஎம் மையம் செயல்பட்டு வரு கிறது. வழக்கம் போல் புதனன்று இரவு பணி முடிந்து வங் கியை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். இதைத்தொடர்ந்து வியாழனன்று அதிகாலை 3 மணியளவில் ஏடிஎம் மையத்தில் நுழைந்த ஒருவர், கண்காணிப்பு கேமராவை கம்பியால் உடைத் தார். இதன்பின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளை அடிக்க முயன்றார். அப்போது அங்கு பொருத்தப் பட்டிருந்த எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனை எதிர்பாராத அந்நபர் தப்பிச் சென்றார். தொடர்ந்து ஏடிஎம்-மில் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர், இயந்திரங்கள் உடைக்கப் பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தக வல் தெரிவித்தார். அதன்பேரில் காவல் துறையினர், தடயங் களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்டிச குழந்தைகளுக்கான போட்டிகள்
சேலம், அக்.5- ஆட்டிசம் என சொல்லப்படுகிற நரம்பியல் வளர்ச்சி குறை பாடுடைய குழந்தைகள், அனைத்து விளையாட்டுகளிலும் சாதிக்க வேண்டும். அவர்களுக்குள்ள தனி திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், அரசு மற்றும் தன்னார்வ அமைப்பின் சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்ஒருபகுதியாக சேலம் மாவட்டம், ரெட்டியூர் பகுதியிலுள்ள மறுவாழ்வு மையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான விளையாட்டுப் போட்டி கள் நடைபெற்றன. 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் வர்ணம் தீட்டுதல் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு ஓவியங்களை வரைந்தனர். இதைத் தொடர்ந்து 1 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தை களுக்கு மாறுவேட போட்டி நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் விவசாயி, சமையல் கலை நிபுணர், காவல் அதிகாரி உள்ளிட்ட வேடங்கள் அணிந்து மகிழ்ந்தனர். இதன்பின் பேச்சுப்போட்டி, நடனம் ஆகியவை நடத்தப்பட் டன. முடிவில், அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பட்டாவிற்கான இடத்தை அளந்து தர வலியுறுத்தி பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
தருமபுரி, அக்.5- வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடத்தை அளந்து தர வலியுறுத்தி பாலக்கோடு வட்டாட் சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூ ராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். இங்கு பெரும்பாலானவர்கள் கூலி தொழில் செய்து, சொந்த வீடு இன்றி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இதனிடையே 1,500 பேருக்கு பாலக்கோடு அருகே உள்ள கூசுக்கல் கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், பட்டா வழங் கிய இடத்தை அளந்து தரவில்லை என கூறப் படுகிறது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, குடியிருக்க இடமில்லை. வீட்டு வாடகை கட்ட முடியவில்லை. இதனால் அரசு சார்பில் வழங்கிய பட்டா இடத்தை அளந்து தருமாறு அதிகாரிகளிடம் வலியு றுத்தினர். அதற்கு அதிகாரிகள் அந்த பட்டா செல்லாது என பெண்களிடம் கூறினர். இத னால் அதிர்ச்சியடைந்த பெண்கள் இது குறித்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்த னர். இதையடுத்து 100க்கும் மேற்பட்ட பெண் கள், அரசு வழங்கிய பட்டா ஆணைகளை கைகளில் ஏந்தி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதைத்தொடர்ந்து, வட்டாட்சியர் ராஜா பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அடுத்த மாதம் பட்டா வழங்கிய இடத்தை அளந்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதன்பேரில் பெண்கள் முற்றுகை போராட் டத்தை போராட்டத்தை கைவிட்டு அங்கி ருந்து கலைந்து சென்றனர்.
420 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
தருமபுரி, அக்.5- காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ் சாலையில் தனியாக நின்றிருந்த காரிலிருந்த 420 கிலோ குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் துறையினர் காரிமங்கலம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அகரம் பிரிவு சாலை அருகே கேட்பாரற்று ஒரு கார் நின்றி ருந்தது. இதனால் காவல் துறையினர் அந்த காரை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த் துள்ளனர். அப்பொழுது காரில் யாரும் இல்லை. ஆனால், காரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்ட மூட்டையாக இருந்தது தெரியவந்தது. இத னையடுத்து காரையும், குட்கா பொருட்களை யும் பறிமுதல் செய்த காரிமங்கலம் காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சோதனை செய்யப்பட்ட தில், சுமார் 420 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கார் யாருடையது? என்பது குறித்தும், காவல் துறையினரை பார்த்ததும், காரை நிறுத்தி சென்றவர்கள் யார்? என்பது குறித்தும், போலீ சார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தருமபுரி வழியாக கடத்தப்பட்டு வருவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சைக்காக ரூ.27 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
நாமக்கல், அக்.5- ஓய்வுபெற்ற அதிகாரிக்கு ரூ.27 லட் சம் மருத்துவ காப்பீட்டுத் தொகை வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல், ஆசிரியர் காலனியைச் சேர்ந்த அசோகன் (62), என்பவர் இன்சூ ரன்ஸ் (யுனைட்டெட் இந்தியா இன்சூ ரன்ஸ்) நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் அந்த நிறுவனத்தில் ரூ.30 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு செய்துள்ளார். இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு கோவையிலுள்ள தனி யார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட் டது. இதனால், சிகிச்சைக்காக ரூ.22 லட்சம் கேட்டு, இன்சூரன்ஸ் நிறுவனத் தில் விண்ணப்பித்தார். ஆனால், குடிப் பழக்கத்தின் காரணமாக கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டது எனக்கூறி இன்சூ ரன்ஸ் பணம் தர மறுத்துவிட்டது. இத னால் அசோகன் கடந்த 2021 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந் தார். இதனை விசாரித்த நீதிபதி வீ.ராம ராஜ் மற்றும் உறுப்பினர் ஏ.எஸ்.ரத்தின சாமி ஆகியோர் செவ்வாயன்று வழங் கிய தீர்ப்பில் மருத்துவச் செலவுக்கான தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்தது சேவை குறைபாடு என தெரி வித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு முன்னதாக கல்லீரல் பிரச்சனை தொடர்பான சிகிச் சைக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோ பர் மாதத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.1.25 லட்சம் வழங்கியுள்ளது. இதனைத் தவறுதலாக அவருக்கு வழங்கி விட்ட தாக இன்சூரன்ஸ் நிறுவனம் நீதிமன்றத் தில் தெரிவித்துள்ளது. அவ்வாறு இருப் பின் தவறுதலாக பணத்தை வழங்க உத்தரவிட்டு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தவறுத லாக வழங்கப்பட்ட பணத்தை அசோ கனிடமிருந்து பெற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்ற விவரங்களை தெரிவிக்காத நிலையில், அசோக னுக்கு தவறுதலாக பணம் வழங்கப்பட் டது என்ற வாதம் ஏற்புடையதல்ல தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு தாக்கல் செய்தவருக்கு சிகிச்சைக்காக ரூ.22 லட்சமும், தற்போது வரை வட்டியாக ரூ.3 லட்சமும், சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் லட்சமும் என மொத்தம் ரூ.27 லட்சத்தை நான்கு வார காலத்துக்குள் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நான்கு வார காலத் திற்குள் இந்தத் தொகையை செலுத்த தவறினால் மருத்துவ செலவு தொகை ரூ.22 லட்சத்துக்கு ஜனவரி 2018 முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை 6 சதவிகித வட்டி சேர்ந்து வழங்க வேண் டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட் டுள்ளது.