districts

ஊராட்சி து.,தலைவர் பதவியிலிருந்து நீக்கம்

கோவை, நவ.19- குன்னத்துார் ஊராட்சி துணைத்தலை வர், பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கோவை மாவட்டம், குன்னத்தூர் ஊராட்சி தலைவராக கீதா தங்கராஜ் பதவி வகித்து வருகிறார். துணைத்தலைவராக மூர்த்தி உள்ளார். தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே தொடர்ந்து தகராறு ஏற் பட்டு வந்துள்ளது. இதன்தொடர்ச்சியாக பல் வேறு புகார்களை தலைவர் மீது, துணைத் தலைவர் மூர்த்தி, கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கும், முதலமைச்சர் அலு வலகத்துக்கும் புகார் மனு அனுப்பினார். இதுகுறித்த விசாரணையின் தொடர்ச் சியாக, ஊராட்சி மன்ற தலைவர் கீதா, காசோ லைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்தனர். இந்த உத்தரவை எதிர்த்து  ஊராட்சித் தலைவர் கீதா, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, கோவை மாவட்ட நிர்வாகத்தின் உத்தர வுக்கு இடைக் கால தடை பெற்றார். இந்நிலை யில், துணைத்தலைவர் மூர்த்தி, தொழில் நிறுவனங்களிடமும் ஒப்பந்ததாரர்களிடமும் கமிஷன் கேட்பதாகவும் ஊராட்சி நிர்வாகத் துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், காசோ லையில் கையெழுத்திட மறுப்பதாகவும், ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் சிலர் வட்டார வளர்ச்சி அலுவல ருக்கும், கோவை மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அனுப்பினர். இதைத் தொடர்ந்து, குன்னத்துார் ஊராட்சியில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், துணைத் தலைவர் மூர்த்தியை பதவி யில் இருந்து நீக்கவும், ஆறாவது வார்டு  உறுப்பினர் கவிதாமணியை துணைத்தலை வராக தேர்வு செய்தும், தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. தீர்மானம், அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஊராட்சி துணைத் தலைவராக கவிதாமணி செயல்படுவார் என மாவட்ட நிர்வாகம்  அறிவித்துள்ளது.