கோபி, ஏப்.15- மணிப்பூர் கலவர சம்பவத்தை மனதில் வைத்து கொண்டு பாஜகவை தோற்கடிப்பது தான், மானபங்கபடுத்தப்பட்ட மணிப்பூர் சகோ தரிக்கு செய்யும் நல்ல காரியம் என திருப் பூர் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயன் பேசி னார். இந்தியா கூட்டணியின் திருப்பூர் மக்க ளவைத் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயன், கோபி அருகே உள்ள காசிபாளையம், ஒடையகவுண்டம்பாளையம், கொடிவேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மால், தேர்தல் நேரத்தில் மீண்டும் பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளித்திருப்பது, எலியை பிடிக்க எலி பொறி யில் தேங்காய் துண்டை வைப்பதுபோல் உள்ளது. இதுபோன்ற பொய்யான வாக்கு றுதிகளை அளிக்கும் பாஜக அரசு, மீண்டும் நாட்டை ஆளக்கூடாது. அதற்கு இந்திய கூட்ட ணியை ஆதரிக்க வேண்டும். பாஜக ஆளும் மணிப்பூரில் பெண்ணை நிர்வாணப்படுத்தி, நீண்ட தூரம் இழுத்து சென்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் குறித்து, மணிப்பூர் முதல்வ ரும் வாய் திறக்கவில்லை. பிரதமரும் வாய் திறக்கவில்லை. அங்கு நேரில் சென்று ஆறுதல் கூட சொல்லவில்லை. இப்படி பட்ட, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தம் வீட்டிலும் இதுபோன்று நடக்காது என என்ன நிச்சயம்? எனவே, மணிப்பூர் சம்பவத்தை மனதில் வைத்து கொண்டு பாஜகவையும், பாஜகவை தாங்கி பிடிக்கும் அதிமுகவை யும் தோற்கடிப்பதுதான், மணிப்பூர் சகோத ரிக்கு செய்யும் நல்ல காரியம் என்றார். இப்பிரச்சாரத்தின் போது, டி.என்.பாளை யம் ஒன்றியச் செயலாளர் சிவபாலன், பேரூர் கழகச் செயலாளர் உம்.எம்.பழனிசாமி, காசி பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி வெற்றிவேல், சிபிஐ நிர்வா கிகள் கனகராஜ், பரமேஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்ட னர்.