பள்ளிபாளையம், ஜன.6- பள்ளிபாளையம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டிட பணி துவக்க விழாவில் மதம் சார்ந்த சடங்கு செய் யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் வெள்ளியன்று நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டிட கட்டுமான பணி துவக்க விழா நடைபெற் றது. இதில் 2021-2022 ஆம் ஆண்டு திட்டத்தில், பள்ளிபாளை யம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு மருத்து வமனை வளாகத்தில் மண் தளத்தினை பேவர் பிளாக் கற் களை கொண்டு மேம்படுத்தும் பணிக்கான துவக்க விழா நடை பெற்றது. இந்த திட்டத்திற்கு, தனியார் ரோட்டரி அமைப்பு சார்பில் நிதியுதவியாக ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் துவங்க உள்ளன. இந்நிலையில், அரசு சார்ந்த விழாவில் மதம் சார்ந்த படங் களோ, சடங்குகளோ பின்பற்றக் கூடாது. ஆனால் தனியார் ரோட்டரி சங்கத்தின் சார்பில், மத அடையாளம் சார்ந்த படங் கள் துவக்க விழா நிகழ்வில் வைக்கப்பட்ட சம்பவம் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரித்த போது, தனியார் ரோட்டரி நிர்வாகத்தின் சார்பில் இந்த ஏற்பாடு செய் யப்பட்டுள்ளதாகவும், நகராட்சி நிர்வாகத்திற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என நகராட்சி நிர்வாகத்தினர் தெரி வித்தனர். இருந்தபோதிலும் எதிர்வரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கருத்து தெரிவித்தனர்.