districts

img

தியாகி இரத்தினசாமி சேவைக்குழு சார்பில் நிவாரணப் பொருட்கள்

திருப்பூர், ஜன.1- தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு, தியாகி இரத்தினசாமி குழு சார்பில் நிவாரண உதவி பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.  தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புத்தாண்டு அன்று தியாகி இரத்தினசாமி குழு சார்பில் நிவாரண உதவி வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதனடிப்படையில் வசூல் செய்யப்பட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிறன்று இரவு நடைபெற்றது. இதில், 800 பேர்களுக்கு லுங்கி மற்றும் உள்ளாடைகள், ரூ 75 ஆயிரம்  மதிப்பிலான பொருட்கள் திருப்பூர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துகண்ணணிடம் வழங்கப்பட்டது. முன்னதாக, வாலிபர் சங்க  மாவட்ட அலுவலக புதுப்பிக்கும் பணிக்கு ரூ5 ஆயிரம் தியாகி இரத்தினசாமி சேவை குழு சார்பில்  வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் மணிகண்டனிடம் வழங்கினர். இந்த நிகழ்வில், தியாகி இரத்தினசாமி சேவைக்குழுவின் நிர்வாகிகள், கருப்புசாமி, அ.ப.பாலசுப்பிரமணியம், ரத்தினசாமி, ஜீவா, மணிபிரகாசம் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.