சேலம், ஜூன் 5- சேலத்திற்கு வருகை தர உள்ள தமிழ் நாடு முதல்வர், ஜூன் 12 ஆம் தேதியன்று, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை யிலிருந்து தண்ணீரை திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரி வித்துள்ளார். சேலம் மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள்கள் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், விழா ஏற் பாடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச் சர் கே.என்.நேரு திங்களன்று ஆய்வு செய் தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முதல்வர் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல் படுத்தி வருகிறார். அந்தவகையில் வரும் ஜூன் 11 ஆம் தேதியன்று சேலம் மாவட்டத் திற்கு முதல்வர் வருகை தந்து, அண்ணா பூங்கா அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து சேலம் பழைய பேருந்து நிலை யத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்க உள்ளார். மேலும், சேலம் கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரி யில் நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவி கள் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள் ளார். இந்நிகழ்ச்சியில், இளம்பிள்ளை கூட் டுக்குடிநீர் திட்டம், அரசு சட்டக்கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தர கட்டடம், சீர்மிகு நகரத் திட்டம், மறு சீரமைப்புப் பணிகள், பள்ளப்பட்டி ஏரி புன ரமைக்கும் பணிகள் மற்றும் புதிய பாலப் பணிகள் உட்பட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணி களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளைத் துவக்கி வைக்க உள்ளார். இதற்குரிய முன்னேற்பாடு பணிகளை இன்றைய தினம் (ஞாயிறன்று) மாவட்ட ஆட் சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் விழா நடைபெற வுள்ள இடத்தினை ஆய்வு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஜூன் 12 ஆம் தேதி யன்று காவிரி டெல்டா பகுதி வேளாண் பெரு மக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். முன்னதாக, இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், மாந கர காவல் ஆணையர் விஜயகுமாரி, சட்ட மன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரி கள் பலர் உடனிருந்தனர்.