விவசாயிகள் மகிழ்ச்சி சேலம், பிப்.24- கல்வராயன் மலையடிவாரத்தி லுள்ள பாப்பநாயக்கன்பட்டி கரியக் கோவில் அணையிலிருந்து சனியன்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப் பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் வட்டம், கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத் தில், கரியக்கோவில் ஆற்றின் குறுக்கே, 52.49 அடி உயரத்தில்,190 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக் கோயில் அணை அமைந்துள்ளது. இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத் திரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், 3 ஆயிரத்து 600 ஏக்கர் விளைநிலங்கள் ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன. ஏ.குமாரபாளையம், கல் யாணகிரி, கல்லேரிப்பட்டி பகுதியில் ஏறக்குறைய 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடி ஆறு மற்றும் ஏரிப்பாச னம் பெறுகின்றன. சுற்றுப்புற கிராமங்க ளுக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த அணை, கடந் தாண்டு போதிய மழை இல்லாததால் நிரம்பவில்லை. தற்போது அணையில் 34.90 அடி உயரத்தில் 83.85 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே தேங்கி உள்ளது. இந்நிலையில், 3 மாதங்களாக மழை யின்றி வறட்சி நிலவுவதால், அணையி லிருந்து பழைய மற்றும் புதிய ஆயக் கட்டு பாசனத்திற்கு (சிறப்பு நிகழ் வாக) தண்ணீர் திறக்க வேண்டுமென, ஆயக்கட்டு பாசன விவசாயிகள் தமி ழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு, தலைமை மதகு வழியாக, சனியன்று காலை 8 மணி முதல் வரும் மார்ச் 6 ஆம் தேதி காலை வரை தொடர்ந்து 11 நாட்களுக்கு, விநாடிக்கு 40 கனஅடி வீதம், (நாளொன்றுக்கு 3.45 மி.கனஅடி வீதம் மொத்தம் 37.95 மி.கன அடி) தண்ணீர் திறக்கவும், புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசனத்திற்கு வலது மற் றும் இடது வாய்க்கால்களில் தலா 15 கன அடி வீதம், விநாடிக்கு 30 கனஅடி, வரும் மார்ச் 6 ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு, (நாளொன் றுக்கு 2.59 மில்லியன் கன அடி வீதம் மொத்தம் 25.90 மில்லியன் கன அடி) தண் ணீர் திறக்க சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி பரிந்துரை செய்தார். இதனையடுத்து கரியக்கோயில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு கூடுதல் தலைமைச் செய லர் சந்தீப் சக்சேனா வெள்ளியன்று அர சாணை வெளியிட்டார். இதனைத்தொ டர்ந்து சனியன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு விழாவில், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் ஆனந் தன், உதவி செயற்பொறியாளர் கவிதா ராணி, உதவி பொறியாளர் கோகுல் ராஜா, பெத்தநாயக்கன்பாளையம் வட் டாட்சியர் மாணிக்கம் மற்றும் விவசாயி கள் பலரும் கலந்து கொண்டனர். வாய்க் கால் மற்றும் ஆற்றுப் பாசனத்திற்கு தண் ணீர் திறக்கப்பட்டதால், கரியக்கோ வில் அணை பகுதி மற்றும் ஆற்றுப் படுகை கிராமங்களில், நீண்ட கால பலன் தரும் பாக்கு மற்றும் தென்னை மரங்கள் பயிரிட்டுள்ள பாசன விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.