உடுமலை, செப்.25- உடுமலை அமராவதி அணையி லிருந்து பாசனத்திற்கு தண்ணீர் ஞாயிறன்று திறக்கப்பட்டுள்ளது. உடுமலை அமராவதி அணையின் மூலமாக திருப்பூர், கரூர் மாவட்டங் களில் சுமார் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், ஆற்றின் வழியோர கிராமங் களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. தென்மேற்கு பருவமழை துவங்கி, அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கடந்த ஜூலை 15ஆம் தேதி அணை நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர் வரத்தை பொறுத்து, உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வந்தது. அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட் பட்ட எட்டு ராஜ வாய்க்கால்களாகும். இதில் ராமகுளம், கல்லாபுரம், குமர லிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழ மாதேவி, கணியூர், கடத்தூர், காரத் தொழுவு வாய்க்கால்களுக்குட்பட்ட 7 ஆயிரத்து 520 ஏக்கர் நிலங்களில், குறுவை நெல் சாகுபடிக்கு மே 16ஆம் தேதியன்று தண்ணீர் திறக்கப்பட்டு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வரை நீர் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் அலங்கியம் முதல் கரூர் வரை வலது கரையி லுள்ள 10 பழைய வாய்க்கால் பாசனத் திற்குட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில், அமராவதி வலது கரை பாசனத்தில் உள்ள 10 வாய்க் கால்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிக்காக ஞாயிற் றுக்கிழமை முதல் 135 நாட்களுக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் 8 ஆயி ரத்து 104 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் ஆகியோர் அணையி லிருந்து ஆறு மற்றும் பிரதான கால் வாய் மூலம் தண்ணீரை திறந்து விட்டனர். இந்நிகழ்வில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முக சுந்தரம், மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம கிருஷ்ணன், வருவாய் கோட்டாச்சியர் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள், விவ சாயிகள் கலந்து கொண்டனர். அம ராவதி அணையின் தற்போது நீர் மட்டம், 90 அடியில் 88.78 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 278 கன அடியா கவும் உள்ளது.