நாமக்கல், ஜன. 16- பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரண மாக விசைத்தறி கூடங்க ளுக்கு விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமார பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக் கான விசைத்தறி கூடங் கள் செயல்பட்டு வரு கிறது. விசைத்தறி தொழிலை நம்பி பல்லாயி ரக்கணக்கான தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். ஜவுளி உற்பத்தி யில் மிக முக்கியமான பகுதிகளாக பள்ளி பாளையம் குமாரபாளையம் உள்ள நிலை யில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டி கையின் போது பண்டிகைக்கு முன்பாக விறுவிறுப்பாக ஜவுளி உற்பத்தி பணிகள் நடைபெறும். மேலும் லுங்கி, வெள்ளை வேட்டி, துண்டு உள்ளிட்ட பல்வேறு ஜவுளிகள் உற்பத்தி செய்யப்படும். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி பள்ளிபாளையம், குமார பாளையம் பகுதியில் இருந்து ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் பழனி மலைக்கு செல் வது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த புதனன்று ஏராளமான தொழிலாளர்கள் பாத யாத்திரையாக சென்றுவிட்ட நிலையில் விசைத்தறிக்கூடங்களுக்கு விடுமுறை விடப் பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிபாளை யம் குமாரபாளையத்தில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் விசைத்தறிக்கூடங் கள் நிறைந்த பகுதி தற்போது ஆள் நடமாட்ட மின்றி அமைதியாக உள்ளது. மேலும் திங்கட் கிழமை முதலே முழுமையாக விசைத்தறி கள் இயங்க ஆரம்பிக்கும் என விசைத்தறி உரி மையாளர்கள் தெரிவித்துள்ளனர்.