districts

img

கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் மாமூல் வசூல்: நடவடிக்கை எடுக்க ஆபரேட்டர்கள் கோரிக்கை

திருப்பூர், ஜன.8- கேபிள் டிவி ஆப்ரேட்டர்களிடமிருந்து அராஜகமாக மாமூல் வசூல் செய்யும் வினி யோகஸ்தரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக கேபிள் ஆப்ரேடர்கள் பொது நலச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்த னர்.  இதுகுறித்து கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2021  ஆண்டில் இருந்து அரசு கேபிள் டிவி வினியோ கஸ்தராக யாரும் நியமிக்கப்படவில்லை. அந்த சமயத்தில் எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக மாற்று வழி யில் தொழில் நடத்தி வந்தோம். கடந்த ஆண்டு  கல்பனா வினியோகஸ்தராக நியமிக்கப்பட்ட  பிறகு எங்களுக்கான தரமான சிக்னல் அரசு  கேபிள் டிவி நிறுவனத்தின் வயர்களில் தரப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந் தோம். ஆனால் இன்று வரை எங்களுக்கு சிக் னல் கொடுக்கப்படவில்லை. ஒரு சில ஆப ரேட்டார்களுக்கு மட்டும் பணம் பெற்றுக் கொண்டு சிக்னல் கொடுக்கிறார். மேலும் , ஆப்ரேட்டர்களிடம் மாதாமாதம் பணம் வசூ லித்து வருகிறார். பணம் தரமுடியாத ஆப ரேட்டர்களிடம் உன் பகுதியில் புதிய நபர்க ளுக்கு அரசு சிக்னல் கொடுத்து தொழிலில் இடையூறு ஏற்படுத்துவேன் என மிரட்டு கிறார். அப்பாவி ஆப்ரேட்டர்கள் தங்களது தொழிலைத் தக்க வைக்க அவரது மிரட்ட லுக்குப் பயந்து பணத்தை கொடுத்து வருகி றார்கள். திருப்பூர் கேபிலில் பகல் கொள் ளையாக இது நடந்து வருகிறது. கேபிள்  டிவி ஆப்ரேட்டர்களுக்கு ஓஎப்சி மூலமாக  சிக்னல் வழங்க வேண்டும் என அரசு ஒப்பந் தத்தில் உள்ளது. ஆனால் தனியார் இன்டர் நெட் ஒளிபரப்பும் ஒருவருக்கு சொந்தமான  இடத்தில் அரசு கண்ட்ரோல் ரூம் அமைத்துள் ளார். மேலும் தனியார் ஒருவருடைய வயரில்  ஆபரேட்டர்களுக்கு எப்படி சிக்னல் வழங்க லாம்? தனியாரின் ஏகபோகத்திற்கு கட்டுப் பட்டு திருப்பூர் செயல் படுவதால் எந்த அரசு  கேபிள் ஆப்ரேட்டரும் இவரை நம்பி தொழில்  செய்ய முன்வரவில்லை. நாங்கள் இணைந்து  செயல்பட தயாராக இருந்தாலும் கல்பனா வின் கணவர் சூர்யா என்பவர் ஆளுங்கட்சி பெயரை தவறாக பயன்படுத்தி மாமூல் கேட்டு  மிரட்டுகிறார். மேலும், கட்டமைப்பு வசதி ஏதும் இல் லாத புதிய ஆட்களை வைத்துக்கொண்டு பல  ஆண்டுகளாக தொழில் செய்து வந்து கொண் டிருக்கிற ஆப்ரேட்டர்களினுடைய பகுதியில்  போட்டி ஏற்படுத்தி, எங்களது ஆப்ரேட்டர்களி டமிருந்து அராஜகமாக மாமூல் தொகையை  வசூல் செய்கிறார். எங்களுக்கு எந்தவிதமான  வசதியும் தடையில்லாத சிக்னல் போன்ற வற்றை ஏற்படுத்திக் கொடுக்காமல் பணம் பறிப்பதிலேயே குறியாக இருக்கிறார். இத னால் ஆபரேட்டர்கள் சூர்யாவை சந்திக்கவே  அச்சப்படுகின்றனர். கல்பனா வினியோகஸ் தராக பொறுப்பேற்ற பிறகு எந்த ஒரு கட்ட மைப்பு வசதிகளையும் செய்யாமல் செட்டாப்  பாக்ஸ்களின் எண்ணிக்கையும் உயர்த்தாமல்  ஒரு வருட காலமாக செயல்பாடு இன்றி  இருந்து வருகிறார். இதுவரை கல்பனாவை  ஆபரேட்டர்கள் நேரில் பார்த்தது கிடையாது.  அவர் அலுவலகத்திற்கு வருவதே இல்லை.  கல்பனா கணவர் சூர்யாவுக்கு மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் தனியாக அறை ஒதுக் கப்பட்டுள்ளதாகவும், அங்கு வந்து ஆப் ரேட்டர்களை சந்திக்க சொல்லியும் வலியு றுத்தி வருகிறார். இது எந்த விதத்தில் நியாய மாக இருக்கும். அரசு கேபிள் டிவி நிறுவ னத்தின் வளர்ச்சிக்கு எந்த வேலையும் செய் யாமலும் தமிழக அரசிற்கும் தமிழக கேபிள்  டிவி கார்ப்பரேஷன் நற்பெயருக்கும் களங் கம் ஏற்படுத்தும் விதமாக சட்டவிரோதமாக செயல்படும். திருப்பூர் டிஎஸ்டி கல்பனா மீது  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கூறப்பட்டுள்ளது.