districts

img

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா

அவிநாசி,பிப்.12- அவிநாசியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அடிக் கல்நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சிக் குட்பட்ட வேலாயுதம்பாளையம் கிராம பகுதியில் சுமார்  இரண்டு ஏக்கர் நிலத்தை அரசு வட்டார போக்குவரத்து அலுவ லகத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இலவசமாக கொடுக் கப்பட்டது. இந்த இடத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்ட வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அலுவலகம் கட்டுவதற்காக  அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக  துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், திருப்பூர் வடக்கு வட்டார ஆய்வாளர் செந்தில் ராம், திருப்பூர் மாவட்ட போக்குவரத்து கண்கா ணிப்பாளர் ஆனந்த், அவிநாசி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாஸ்கர், காங்கேயம் ஆய்வாளர் ஈஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வேலுச்சாமி, துணைத் தலை வர் விஜயலட்சுமி விஜயராஜ், சமூக ஆர்வலர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.