districts

img

ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்; இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்: கே.பாலகிருஷ்ணன் உறுதி

சேலம், ஏப்.6- இந்தியா கூட்டணி அமோக வெற்றிபெறும்; ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சேலத் தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகை யில், தேர்தல் அறிவிப்பு வந்த நேரத்தை விட தற் போது இந்தியா கூட்டணிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு  பிரகாசமாக உள்ளது. மோடிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பலை வீசுகிறது. தமிழகத்தில் பாஜக மீது சுனாமி வீசுகிறது. மண்டல் கமிஷன் சிபாரிசை அமல்படுத்திய வி.பி.சிங்கின் ஆட்சியை கெடுத்தவர்கள், வர்ணா சிரமத்தை ஆதரிக்கும் கட்சியான பாஜகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி எப்படி ஆதரித்தது என  தெரியவில்லை. விருப்பம் இல்லையென்றாலும், காலை பிடித்து இழுத்து கூட்டணியில் சேர்த்துள் ளது பாஜக. தேர்தல் களத்தில் அதிமுக பூஜ்ஜிய மாக உள்ளது. பாஜகவை எதிர்த்தும் பேச முடிய வில்லை ஆதரித்தும் பேச முடியாமல் இரண் டாம் கெட்ட நிலைமையில் அதிமுக உள்ளது. எடப்பாடி பழனிசாமி எதற்காக பாஜகவுடன் கூட்ட ணியில் இருந்து விலகினார் எனவும் கூற வில்லை, பாமக ஏன் பாஜகவுடன் சேர்ந்தார்கள் எனவும் கூறவில்லை.  அதேநேரத்தில், இந்தியா கூட்டணி என்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள் ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள் ளது. குறிப்பாக காலை உணவு திட்டம், கல்லூரி  மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் நல்ல பெயரை இந்தியா கூட்டணி வரவேற்பை பெற்றுள் ளது. இந்தியா கூட்டணி அதிக வாக்குகள் வித்தி யாசத்தில் நல்ல முறையில் வெற்றி பெறும். பாஜக வும் அதிமுகவும் எது இரண்டாவது இடத்தில் வரும் என்பது தான் அவர்களின் போட்டியாக உள் ளது. வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் எனவும், 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி  பெறும் என மோடி கூறுவது வேடிக்கையானது. கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வெற்றி பெறவே முடியாது. குறிப்பாக தமிழகத்தில் ஒரு  இடத்தில்கூட பாஜகவினர் வெற்றி பெறவே முடி யாது. தமிழகத்தில் பாஜக துடைத்து எரியும் கட்சி யாகவே உள்ளது. பீகார் மகாராஷ்டிரா, ராஜஸ் தான் உள்ளிட்ட இடங்களிலும் பாஜக நினைத்த இடத்தில் வெற்றி பெற முடியாது. எனவே, அவர் களுடன் கூட்டணி வைத்த பல கட்சி தலைவர் களே வெளியேறி வருகின்றனர்.  வட மாநிலங்க ளில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற முடியாது என்பது உறுதியாகிவிட்டது. இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும், இந்தியாவில் ஆட்சி மாற் றம் நடைபெறுவது உறுதி என்றார். இந்த பேட்டியின்போது, சிபிஎம் சேலம் மாவட் டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கிடபதி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.