சேலம், செப்.21- பெண்ணுக்கு பாலியல் தொந் தரவு தந்த வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்தும், அதிமுக கவுன்சில ரின் தலையீடு காரணமாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கா மல், ஒருதலை பட்சமாக செயல் படுவதாக பாதிக்கப்பட்ட பெற் றோர் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர். சேலம் மாவட்டம், காடையாம் பட்டி பகுதியைச் சேர்ந்த பெற்றோர் வியாழன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் சமூக நலத்துறை அதி காரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். இதன்பின் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. மகள் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மூங்கில் ஏரி பட்டி ரேசன் கடையில் பணிபுரிந்து வரும் நபர் எங்கள் வீட்டு அருகே வசித்து வருகிறார். நாங்கள் வேலைக்கு சென்ற நேரத்தில், எனது மகளிடம் தவறாக நடந்து கொண்டு பாலி யல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து எனது மகள் என்னிடம் தெரி வித்தபோது அதிர்ச்சியடைந்து, தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தோம். அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட நபர்மீது
இதுவரை எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், வழக்கை திரும் பப்பெற வேண்டும் என அதிமுக கவுன்சிலர் வெங்கடேஷ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் எங்களை வந்து மிரட்டல் விடுகின்றனர். மேலும், வழக்கை திரும்பப்பெறா விட்டால் ஊரில் வசிக்க முடியாது என்று மிரட்டல் விடுத்து வருகின்ற னர். குறிப்பிட்ட தொகை தருவதாக வும், உடனடியாக வழக்கை திரும் பப்பெற வேண்டும் எனவும் வற்பு றுத்துகின்றனர். இல்லையென்றால் உயிருடன் இருக்க முடியாது என வும் மிரட்டுகின்றனர். எங்களால் ஒன் றும் செய்ய முடியவில்லை. புகார் தெரிவித்து வழக்குப்பதிவு செய்து 21 நாட்கள் ஆகியும் எந்த நடவ டிக்கையும் எடுக்காததால் வேறு வழி இல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந் துள்ளோம். எனவே, உடனடியாக எங்கள் புகார் மீது நடவடிக்கை எடுத்து, எனது மகளுக்கு பாலியல் தொந்த ரவு அளித்த நபரை போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்ய வேண்டும். மேலும், அவருக்கு உடந்தையாக செயல்பட்டு வரும் அதிமுக கவுன் சிலர் உட்பட ஐந்து பேர் மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கண் ணீர் மல்க தெரிவித்தனர்.