ஈரோடு, மார்ச் 22- மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் 24 மணி நேரமும் கூடுதல் ஆட்சி யர் தலைமையிலான குழு அமைக் கப்பட்டுள்ளதால், பறிமுதல் செய் யப்படும் பணங்களுக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தால், உட னடியாக பணம் திரும்ப வழங்கப்ப டுகிறது என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ராஜகோ பால் சுன்கரா தெரிவித்துள்ளார். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக் கும் பணி தொடங்கியது. அந்த வகை யில், ஈரோடு வருவாய் கோட்டாட்சி யர் அலுவலகத்தில் உள்ள வாக் குப்பதிவு இயந்திரங்களை, மற்ற பகுதிக்கும் அனுப்பி வைக்கும் பணி யினை, மாவட்ட தேர்தல் அலுவல ரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத் தார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், ஈரோடு மாவட்டம் முழுவ தும் தேர்தல் நடத்தை விதிமுறை கள் நடைமுறையில் உள்ளது. அதன் படி, ஈரோடு மாவட்டத்தில் நாடாளு மன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்காக 2,222 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 10,970 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 2,663 கட் டுப்பாட்டு இயந்திரம், 2,663 வாக் குப்பதிவு இயந்திரம் தயாராக உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் இது வரை 18004250424 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு 23 புகார்களும், சிவிஜில் கைப்பேசிச் செயலி மூலமாக 10 புகார்களும் வரப்பெற்றுள்ளன. அனைத்து புகார்களுக்கும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 25 பறக்கும் படை, 24 நிலை கண் காணிப்புக் குழு, 8 வீடியோ கண் காணிப்புக் குழு ஆகியவை அமைக் கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவி ரமாக நடைபெற்று வருகின்றது. இதில் இதுவரை ரூ.93 லட்சத்து 23 ஆயிரத்து 78 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஆவணங்கள் சமர்ப் பித்ததால், ரூ.22 லட்சத்து 64 ஆயிரம் திரும்ப வழங்கப்பட்டுள் ளது. முறையான ஆவணங்கள் இருந்தால் பணம் பறிமுதல் செய்யப் படாது. இது தேர்தலுக்கான நேரம், எனவே தேர்தல் அதிகாரிகள் அவர் கள் பணியை செய்து வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து வருபவர்களிடம் ஆவணங் கள் இல்லை என்றால் மட்டுமே பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கூடுதல் ஆட்சி யர் தலைமையிலான குழு அமைக் கப்பட்டுள்ளது. ஆவணங்கள் சமர்ப் பித்தால் உடனடியாக பணம் திரும்ப வழங்கப்படுகிறது. மலைப்பகுதியில் உள்ள வாக் குச்சாவடிகளில் ஆண்களை மட் டுமே பணியமர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. அனைத்து வாக்குச்சா வடிகளிலும் முதல் நாளிலேயே வாக்குச்சாவடி அலுவலர்கள் அங்கு சென்று தங்குவதற்கான ஏற்பா டுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், மின்சாரம், குடிநீர் உள் ளிட்ட அடிப்படை தேவைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள் ளது என்றார். இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுநாதன் (தேர்தல்), ஈரோடு வருவாய் கோட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான சதீஷ்குமார் மற்றும் அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.