districts

img

களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திடுக

தருமபுரி, ஜன. 24- களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. நில அளவை துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் நிரப்ப வேண்டும்.  டிஜிபிஎஸ், கருவியை  அனைத்து வட்டங்களுக்கும் வழங்க வேண்டும். உட்பிரிவு செய்ய இயலாத மனுக்கள் மீது கூட்டுபட்டா பரிந்துரை செய்யும் வசதி வழங்கவேண்டும். மாநிலம் முழுவதும் நவீன மறு நில அளவை திட்டப்பணி தொடங்க வேண்டும். களப்பணியாளரிகளின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்ட தலைவர் கி.வெங்கடேசன் தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரூர் கோட்ட  தலைவர் ரா.சக்திவேல் வரவேற்றார். மாநிலச் செயலாளர் ரா. கல்பனா, மாவட்ட செயலாளர் சி.பிரபு  ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இதில், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் அ.சேகர், மாவட்ட பொருளாளர் எஸ்.இளவேனில் ஆகியோர் வாழ்த்தி  உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்ற னர். முடிவில், கோட்ட தலைவர் அ.சங்கீதா நன்றி கூறினார்.